கமல ஹாசனுக்கு ஏன் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை?, பாலாவிற்கு ஏன் அரசு வீடு கொடுக்கவில்லை, கலைஞர்களுக்கு இந்த அரசு செய்தது என்ன? : சீமான் கொதிப்பு
அதாவது அன்னாரின் ஈழ பிசினஸ் படுத்துவிட்டது, சாதி அரசியல் முடியாது. காஷ்மீர் பிரச்சினை முடிந்தது, கலைஞர் பற்றி ஒன்றும் பேசி அரசியல் செய்ய முடியாது, அரசியல் கட்சி படுகுழியில் கிடக்கின்றது, இனி வந்தேறி வரப்பேறி என்றால் உயிர் ஆபத்து.
அவரும் என்ன செய்வார், முதல் தொழிலான சினிமாவிற்கு திரும்ப பார்க்கின்றார், அதற்கான தொடக்க அறிக்கைகள் தான் இவை
கெட்ட பய சார் இந்த சைமன், எந்த வழி போனாலும் உருப்படமாட்டான். எல்லா பேச்சும் 4 நாளைக்குத்தான்.
காசா முனையில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி..!!
இஸ்ரேலுக்கு ஒலிம்பிக், ஆசிய போட்டி, உலக தடகளம் எல்லாம் இந்த காசா முனையும், மேற்கு கரையும்தான். இதில் துப்பாக்கி சுடுதல் முதல் எல்லா வித்தைகளும் உண்டு
எத்தனை பாலஸ்தீனியர்களை கொல்கிறார்களோ அத்தனையும் மெடல் கணக்கு. ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 10 போட்டிகளாவது நடத்திவிடுகின்றார்கள்.
இந்த பரிதாபத்துகுரிய பாலஸ்தீனருக்கே செவிகாய்க்கா உலகம்தான் ஈழ தமிழருக்கு கிழித்துவிடுமாம், இதனை சொன்னால் நான் தமிழின துரோகி.
No comments:
Post a Comment