சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இலங்கை கிழக்கு மாகாண இஸ்லாமியர் மீது காத்தன்குடியில் பள்ளிவாசலில் புலிகளால் கொடூர தாக்குதல் நடைபெற்றது, 103 பேர் வெட்டி கொல்லபட்டனர்
புனிதமான பள்ளிவாசல் எங்கும் ரத்தம் ஆறாக ஓடிய கொடூர காலம் அது.
இன்று காலம் மாறி அங்கு அமைதி திரும்பிற்று, ஆனால் மக்கள் அந்த வடுக்களை மறக்காமல் வருடந்தோறும் நினைவு கூர்வார்கள். இவ்வருடம் அந்த ரத்தகறையினை பழியினை வித்தியாசமாக பழிவாங்கிவிட்டார்கள்
பழி என்றால் அதற்காக எங்கே மிச்ச புலிகள் என சொல்லி அவர்களை வெட்டி கொன்று ரத்தத்தை ஓடவிடுவது அல்ல
மாறாக அன்று சிந்தபட்ட சகோதர ரத்தம்போல நமது ரத்தம் வீணாக போககூடாது, 4 பேர் உயிரை காப்பாற்றட்டும் என ரத்த தானம் செய்திருக்கின்றார்கள்
இனி அந்த ரத்தம் தேவைபடும் இலங்கையர் உடலில் ஓடும், அது தமிழராக, சிங்களராக, இந்துவாக கிறிஸ்தவராக, பவுத்தராக யார் உடலிலும் ஓடும், உயிர்காக்கும்
உண்மையில் பாராட்டபட தக்க பணி இது, ரத்த பழிகளை இப்படி ரத்ததானம் மூலம் பழிவாங்கலாம் என செவிட்டில் அடிக்கும் தத்துவம் இது
உலகம் பின்பற்றவேண்டிய பெரும் முன்மாதிரி இது. எங்கள் பள்ளிவாசல் ரத்தவெள்ளத்திற்கு பழிதீர்ப்போம் என வெடிகுண்டோடு கிளம்பினால் என்ன மிஞ்சும்
புலிகளின் கொடூர உயிர்பறிப்பினை, உயிர்காத்தல் மூலம் மிஞ்சிநிற்கும் மனித தன்மை இது
சாதி, மதம், இனம் மொழி என மோதிக்கொள்பவர்கள் படிக்கவேண்டிய பாடமிது, காரணம் ரத்தம் கொடுத்தவர்களின் உறவினர்கள் தந்தையாக, குழந்தையாக, சகோதரனாக அந்த கொடூரத்தில் கொல்லபட்டிருந்தார்கள்.
ஆனாலும் அதற்கு பழிவாங்காமல் இன்னொரு உயிரினை காப்பாற்ற கிளம்பிவிட்ட இவர்கள்தான் உண்மையான மார்க்கவாசிகள், கண்ணியமான இஸ்லாமியர்.
இறைவனின் ஆசி அவர்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தங்கட்டும்
அந்த இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்துகின்றோம், நீங்கள் தொப்புள்கொடி உறவல்ல, மாறாக கொண்டாட வேண்டிய சகோதர உறவு
புலிகளின் பிம்பம் மொத்தமாக நொறுங்கும் நேரம், மானிட நேயம் உயர்ந்து நிற்கும்கும் காலம்
26 வருடத்தில் காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது.
No comments:
Post a Comment