"நரேந்திர மோடிக்கு நாம் சொல்ல விரும்புவது என்ன?" நியுஸ் 7 தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்கபோகிறாம் திருமுருக காந்தி
நரேந்திர மோடிக்கு சொல்ல விரும்புவதை நியுஸ் 7 தொலைகாட்சியில் அன்னார் சொல்லபோகின்றாராம், அப்படி என்ன சொல்வார். தாது மணல் வியாபாரத்தை மத்திய அரசே எடுத்து நடத்தட்டும் என்றா சொல்லிவிடவா போகின்றார்?
இல்லை சொல்லிவிட்டுத்தான் வெளி வந்துவிட முடியுமா?
அவர் என்னமும் சொல்லட்டும், நாம் நரேந்திரமோடிக்கு சொல்ல விரும்புவது எல்லாம், அந்நிய நாட்டு தீவிரவாதிகளை ஆதரித்து விடுதலை செய்ய கொடிபிடிப்பவர்களையும், இந்திய ராணுவத்தை பழித்துகொண்டு பேசிதிரிபவர்களையும் பிடித்து தேசதுரோக வழக்கில் செய்யவேண்டியதை செய்யுங்கள்
சர்ச்சைகள் இருந்தாலும், அருண் ஜெட்லி ஒருவரை தவிர உருப்படியாக அமைச்சரவையில் யாரும் இல்லை எனினும் ஒன்மேன் ஆர்மியாக தாங்கி நிற்கிறார் மோடி, உலகெல்லாம் பறந்து ஏதோ செய்ய நினைக்கின்றார், யாருக்கு?
இந்த நாட்டுக்கு, நிச்சயம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு
அவருக்கு, இந்த தேசத்தின் அப்பட்டமான பிரிவினைவாதி , குழப்பவாதி ஏதோ சொல்ல விரும்புகின்றாராம், எல்லாம் கால கொடுமை"
இவர் சொல்லி அதனை கேட்டு ஆட்சிநடத்தும் இடத்திலா இருக்கின்றார் மோடி?,
இதெல்லாம் ம்ம்மேஏஏஏஏ என கத்தும் 17 பேர் கொண்ட கும்பலுக்கான டிராமா, பாவம் அந்த ஆடுகள்
அதிமுக ஒரு வன்முறை இயக்கம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார் என மேலிடம் அறிவித்த பின் தெரிந்துவிடபோகின்றது யார் வன்முறை இயக்கம் என்று, அவ்வளவுதான்
இன்றைய உலகம் மிக பெரும் கலவரம் வரும் என எதிர்பார்க்கும் இடமே சத்தியமூர்த்தி பவன் என்பதை இளங்கோவன் மறந்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் ஜெயலலிதா : எம்எல்ஏ ராமு
எம்ஜிஆர் படங்களில்தான் ராமு தொந்தரவு தாங்கமுடிவில்லை என்றால் அவர் கட்சியிலும் அப்படித்தான் இருக்கின்றது
அமெரிக்க வரலாற்றிலே முதல்முறையாக ஒரு பெண் அதிபர் தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு வருகின்றது, அதனை கெடுப்பதில் ராமுவிற்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை
இதனை கேள்விபட்டால் ஹிலாரி தேர்தலில் நிற்பார் என்றா நினைக்கின்றீர்கள்?, கண்ணீர் விட்டு கதறி ஓடிவிடமாட்டாரா?
எனினும் இதனை கேள்விபட்டால் ரஷ்யாவின் புடினும், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவும் வாய்விட்டு சிரித்து மகிழ்வார்கள், ராமுவிற்கு மாஸ்கோ பயணம் கூட வாய்க்கலாம்
இதற்கு மேலும் அமெரிக்க அதிபர் வேட்பாளரை மட்டம் தட்ட என்ன இருக்கின்றது?

கலைஞரை முதல்வராக்கிய பெரும்பங்கு தீரன்
சின்னமலைக்கு உண்டு :ஸ்டாலின் பேட்டி
ஏன் அவருக்கு மட்டும் பங்கு?, இந்த திப்பு சுல்தான், கட்டபொம்மன், பூலித்தேவன், மருதநாயகம், மருதுபாண்டியர் எல்லாம் கலைஞர் முதல்வராக பாடுபடவில்லையா?
(அவ்வளவு பொறுப்பாக பத்திரிகை நடத்துகின்றார்கள்)
மிஸ்டர் சைமன், ஒரு கன்னட பெண்ணால் தாக்கபட்ட நாதியற்ற தமிழச்சி டெல்லியில் போய் கதறி அழுதிருக்கின்றாளே, ஏதாவது வாய் திறந்து சொல்றது?
அற்ப காரணங்களுக்கு எல்லாம் நானும் ஒரு அரசியல்வாதி என் அறிக்கையிட்டுகொண்டிருந்த சீமானை இப்பிரச்சினையில் காணவில்லை ,
இதே ஒரு ஈழப்பெண் சிங்கள பார்லிமெண்டில் அழுதால் அன்னார் சும்மா இருப்பாரா? வள்ளுவர் கோட்டம் முன் சீறுவார், கூட ஆட்டுமந்தை இயக்கமும் கத்தும்.
ராஜதந்திரம் நிறைவேறிய மகிழ்ச்சியில் வைகோ நிரந்தர மவுன விரதம், நேர்த்திகடன்.
ராமதாஸுக்கு ஒரு மோசடி நாடக காதல் கதை சிக்கி இருக்கும் நேரம், ஒரு பெண் எரிக்கபட்டிருக்கும் நிலை, அரசியல் செய்ய அப்படி ஒரு வாய்ப்பு , நிச்சயம் அட்டகாசமான வாய்ப்பு
அப்படி லட்டு கையில் கிடைத்திருக்கும் நேரத்தில்தான் சசிகலா புயல் அடிக்கிறது என்ன செய்ய? மனிதர் கடும் அப்செட்.
நிச்சயம் அந்த பெண் எரிப்புதமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், பல சர்சைகளுக்கு தலைகீழ் முடிவு கொடுத்திருக்கும்
ஆனால் என்ன செய்ய, சசிகலா ஒப்பாரியில் சகலமும் அடங்கிபோனதில் மருத்துவர் மூட் அவுட்.
No comments:
Post a Comment