Tuesday, August 16, 2016

தாது மணல் ஆலைக்கு எதிராக போராட்டம்

தாது மணல் ஆலைக்கு எதிராக போராட்டம் : மீணவர் அமைப்புகள் தூத்துகுடியில் அறிவிப்பு

சில இடங்களில் விமர்சிக்கபட்டவர் என்றாலும் தூத்துகுடியில் மிக தைரியமாக அன்றே தாதுமணலுக்கு எதிராக மீணவர்கள் போரடவேண்டுமென்ற ஒரே கட்சி தலைவர் விஜயகாந்த்

அது பின்னர் நாடாருக்கு எதிராக மீணவ மக்களை தூண்டிவிடுகின்றார் என திரிக்கபட்டு விவகாரமனது, சங்கத்து ஆட்கள் எல்லாம் களம் புகுந்தனர் பெரும் சர்ச்சை வெடித்தது

அங்கிள் சைமன் கூட விஜயகாந்தினை வழக்கம் போல ஓநாய் சவுண்டில் விஜயகாந்தினை தெலுங்கர் என விமர்சித்து அடுத்து எப்படி பேசலாம் என தாடையினை தடவி சிந்திபதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது

இப்போது காட்சிகள் மாறுகின்றன‌

சசிகலா புஷ்பா அல்ட்ராசிட்டியும், தொடர்ந்து தாது மணல் லாரிகள் சிறைபிடிப்பும், அதனை தொடர்ந்து சங்கத்து ஆட்கள் கழன்று கொள்ளவும் ஏதோ நடப்பது தெரிகின்றது.

உச்சமாக மீணவர் அமைப்புக்கள் "தாங்களாகவே" போராட்டம் தொடரபோகின்றதாக அறிவித்திருக்கின்றார்கள்,

இதுவரை நெத்திலி குழம்போ அல்லது சுறா புட்டோ உண்டுவிட்டு கடற்கரையில் திரிந்தவர்கள் திடீரென தோரியம், மெட்ரிக் டன் என பெரும் விஞ்ஞானமும் புள்ளிவிவரமும் பேச கிளம்புகின்றனர். எங்கோ புகைகின்றது

அதாவது எங்கோ பற்றி எரிகின்றது, புகை வருகின்றது.

விஜயகாந்த் இப்பொழுது அடித்து ஆடும் களம், அன்றே சொன்னேன் அல்லவா என அவர் அரசியல் செய்ய கிளம்பலாம், அருமையான வாய்ப்பு.

எங்கோ மூலையில் மல்லாக்க கிடக்கும் துண்டு கட்சிகளுக்கு ஒரு வாய்ப்புதான், ஏதேனும் அறிக்கை விட்டு அரசியல் செய்யலாம்

இதில் அன்று சீறிய அங்கிள் சைமன் எங்கே என்று கேட்கின்றீர்களா? அவர் எங்கோ வேகமாக தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கலாம்,

விரட்டி பிடிக்க உசேன் போல்ட் வந்தாலும் முடியாது.

No comments:

Post a Comment