Saturday, April 8, 2017

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம்...

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம், சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது


நேற்றைய போட்டியில் குஜராத்தும், கொல்கத்தா அணியும் மோதின, இரு அணியிலும் பவுலர்கள் சரியில்லை


அதுவும் குஜராத் அணியின் பவுலர்கள் இன்னும் மகா மோசம், குறிப்பாக ஒரு ஸ்பின் பவுலரை கொண்டுவந்திருந்தார்கள், அவரும் மிக சரியாக சிக்சர் அடிக்குமாறு வீசி கொடுத்தார்.




அவர் பந்துவீச வந்தவுடன் அம்பையர் இரு கைகளை தூக்கிகொண்டே நிற்க தயாராகும் அளவு நிலமை இருந்தது


ஒரு பவுலர் கூட விக்கெட் எடுக்கும் வெறியில் பந்து வீசவே இல்லை, பெட் விவகாரம் இருக்குமோ என சந்தேகிக்கும் அளவில் அந்த பந்துவீச்சு இருந்தது, போராட்ட குணம் யார் முகத்திலும் இல்லை


கலைஞரும் தினகரனும் மேடை விவாதத்தில் பங்குபெற்றால் எப்படி இருக்கும்? அப்படி ஆட்டம் இருந்தது,


கல்கத்தா அணி வென்றது சுவாரஸ்யமே இல்லை, புலி போராடிய ஆக்ரோஷம் இல்லை, பசுமாடு புல்லை தின்பது போல அமைதியாக இருந்தது ஆட்டம்


இன்று பெங்களூர் அணி விளையாடபோகின்றதாம், புனே அணி இன்னொரு ஆட்டத்தில் விளையாடும் என்கின்றார்கள்


இதில் எப்படி அணல் பறக்கின்றது என பாக்கலாம், பல தீபொறிகளும், சுனாமிகளும், சூறாவளிகளும் அங்குதான் இருக்கின்றன...






ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றதால் அச்சமில்லை : டிடிவி தினகரன்


இவருக்கு அச்சமில்லை ஆனால் தமிழக அச்சமே அதுதானே..








No comments:

Post a Comment