Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: முதல்வர், இன்னும் பிற .....

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன், சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி


முதல்வராக இவர்தான் தொடங்கிவைக்க வேண்டும், ராமராஜனையா அழைக்க முடியும்?


ஒருவேளை சின்னம்மா முந்திகொள்வார் என்ற அச்சம் இருக்குமோ? அவர் கவலை அவருக்கு.






கொசுறு 


பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்: தனுஷ்


இல்லை, மிகபெருமை என அறிக்கை விட்டு பாருங்கள், அதன் பின் தெரியும்,


மெரினா கூட்டம் தெரிந்திருக்கும் அல்லவா?




மெரினா என்ன மெரினா சிம்பு வீட்டு முன்னாலும் ஒரு கூட்டம் உண்டு, சிம்பு விடுவாரா?


எப்படியோ தனக்கும் நடிக்க வரும் , கூடவே பல்டியும் அடிக்கவரும் என தனுஷ் நிருபித்துவிட்டார்


மாமனார் 8 பல்டி என்றால் மருமகன் 16 பல்டி அடிப்பார் போல,


நல்ல பல்டி குடும்பம்.


இன்னும் மனிதர் பீட்டா விருதை கூவத்தில் எறியவில்லை .


ம்ம் கூவத்தில் எறிவீர்களா மிஸ்டர் தனுஷ்? முடியுமா?


அது என்னபடம்? என்னை நோக்கி பாயும் தோட்டாவா?


பாய்ந்துவிடுமா? பார்த்துவிடுவோமா?







மலேசிய தமிழர்கள் முதன் முறையாக தமிழக தமிழர்களை வித்தியாசமாக‌ பார்க்கின்றார்கள்

கொஞ்சமாவது நிமிர்ந்து நடக்க முடிகின்றது

வாழ்த்துக்கள் ஸ்டுடன்ஸ்




 

No comments:

Post a Comment