Sunday, January 15, 2017

அத்வானியின் புது கவலை?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நம்மிடம் இல்லாததால், இந்தியா முழுமை பெறவில்லை : அத்வானி கவலை.


இது என்ன புதுகவலை?




யார் கவலைபட்டாலும் இந்தியா தாங்கும், அத்வாணி கவலைபட்டால் தாங்காது.


முன்பு ராமருக்கு ஒரு கோயில் இல்லையே என அவர் கவலைபட்டு ரதம் எல்லாம் ஏறி, இந்தியா எல்லாம் சுற்றி பெரும் கலவரம் வந்து மசூதி இடிக்கபட்டு ரத்த ஆறு ஓடியது பெரும் களங்க வரலாறு


இப்பொழுது இந்தியா ஓரளவு அமைதியாக இருக்கும்பொழுது அன்னார் கவலை சிந்து மாகாணம் மீது சென்றிருக்கின்றது


இந்த சிந்து மாகாணம் இந்தியாவில் வரவேண்டும் என்பது கோட்சே கனவு, இந்த பாஜக ஆட்சியில் அத்வாணிக்கும் அதே கனவு வராவிட்டால்தான் ஆச்சரியம்.


என்ன திடீரென‌ அன்னாருக்கு அப்படி ஒரு ஆசை, மோடிக்கும் இவருக்கும் எங்கோ உரசியிருக்கலாம். ரூபாய் நோட்டில் சரிந்த பாஜக இமேஜை தூக்கி நிறுத்தவும், மோடியினை ஒரு வழி செய்யவும் ஒரு அதிரடி காரியம் அத்வாணிக்கு தேவைபட்டிருக்கலாம்


மறுபடியும் ரதம் எல்லாம் ஏறி, இன்னொரு ரத்த களறியினை இவர் ஏற்படுத்தாமல் இருக்கட்டும். அந்த நோக்கில் ரதம் ஏறினால் அந்த ரதத்தை அப்படியே பாகிஸ்தானுக்கே அனுப்பிவிடுவோம்.


அத்வாணிக்கு இன்னும் புதுபுது கவலைகள் வராமலிருக்கட்டும், பாகஜவில் தனிமையில் இருந்தால் அப்படித்தான் அத்வாணி


தமிழ்நாட்டிற்கு வாருங்கள், சிரித்து மகிழலாம் அப்படி பெரும் காமெடிகள் எல்லாம் நடக்கின்றன, இங்கு வந்தால் அந்த கவலைகளை எல்லாம் மறந்து நீங்கள் வாய்விட்டு சிரித்துகொண்டே இருக்கலாம்


உங்களுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது.


எல்லோருக்கும் அது நல்லது, மோடிக்கு இன்னும் நல்லது.



No comments:

Post a Comment