Wednesday, January 18, 2017

கலைஞரின் தந்திரம் பன்னீருக்கு வராது....





கலைஞர் போன்றவர்கள் முதல்வராக‌ இருந்தால் எப்படி சமாளிப்பார்கள் தெரியுமா? இப்படித்தான்


விளையாட்டு நடத்தவேண்டும், ஆனால் ஆடவும் கூடாது அதே நேரம் அரசு விளையாட அனுமதி கொடுத்ததாகவும் பார்த்துகொள்ள வேண்டும்


என்ன செய்வார்? இப்படி அறிவிப்பார்





"ஜல்லிகட்டுக்கு பதிலாக‌ விளையாட்டாக ஸ்பெயின் பாணி காளை விளையாட்டு, காட்சிபடுத்தபடாத வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் விளையாடும் போட்டி இன்றுமுதல் அறிவிக்கபடுகின்றது

ஒரே நிபந்தனை மாடும் ஒரே ஒரு வீரரும் தவிர யாரும் மைதானத்தில் நிற்க கூடாது, மாட்டினை வளர்ப்போர் அதே மாட்டினை அடக்க கூடாது

ஒருவன் ஒரு மாட்டினை தனியாக அடக்க வேண்டும்"

அவ்வளவுதான், ஒரு பயலும் மைதானத்திற்குள் நுழையமாட்டான்

இது ஜல்லிகட்டு இல்லை என சொல்லியும் ஆகிவிட்டது,

மைதானத்தில் ஒரு பயல் இல்லை என்பதால் போட்டி நடத்தவில்லை என்றும் ஆயிற்று,

அதே நேரம் ஜல்லிகட்டினை மீட்ட தமிழின தலைவர் என முரசு கொட்டவும் வழியாயிற்று

இது என்ன என கேட்டால்?

இதுதான் தமிழ் வீரம், நான் விளையாட்டை மீட்டெடுத்துவிட்டேன் முடிந்தால் விளையாடுங்கள் அரசுக்கு ஆயிரம் வேலை என சொல்லி நகர்ந்துவிடலாம்

இந்த தந்திரம் எல்லாம் பன்னீருக்கு எப்படி வரும்? சுட்டு போட்டாலும் வராது.








No comments:

Post a Comment