சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் : சசிகலா
ம்ம்ஹூக்கும்...........................
முதல்வர் பன்னீருக்கு தெரியாதா இதெல்லாம்?, முடியாமல்தானே அலறி அடித்து ஓடியிருக்கின்றார்.
இதில் இவர் தீர்மானம் கொண்டுவருவாராம், சும்மா இருக்கும் போராட்டகாரர்களை பார்த்து என்னையும் நாலு திட்டு திட்டுங்கள் என அழைத்தது போல இருக்கின்றது
இந்த தீர்மானம் , கடிதம், வாக்குறுதி எல்லாம் வேலைக்கு ஆகாது என சொல்லித்தானே பன்னீரை டெல்லிக்கு விரட்டியிருக்கின்றார்கள்?
எங்கே இதனை மெரினா சென்று அம்மா சமாதியில் வணங்கிவிட்டு போராட்டகாரர்களிடம் சொல்லுங்கள் பார்க்கலாம்?
அம்மையாருக்கு அரசியல் வரவில்லையா? இல்லை பன்னீர் விலகினால் நான் என்ன செய்வேன் தெரியுமா? என சொல்ல வருகின்றாரா?
சும்மாவே அழுமுஞ்சியும், சீரியசான முகமும் கொண்டவர் அம்மணி, இப்பொழுது மகா சீரியசில் இருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது
ஜெயலலிதாவின் உடை , பாவனை, கொண்டை வரை பின்பற்றுபவர் ஜெயாவின் பிரதான ஸ்டைலான "நான்" "எனது அரசு"" என் கட்டளை" போன்ற ஆணவ சொற்களை ஏன் இன்னும் பின்பற்றவில்லை????
No comments:
Post a Comment