Tuesday, January 24, 2017

சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

தமிழக மாணவர்களின் பெருமை மிகு போராட்டம், பெரு மகிழ்வோடு முடியவேண்டிய நேரத்தில் சில விஷமிகளால், சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று


நிச்சயமாக மாணவர்களின் போராட்டம் கண்ணியமும், மிகுந்த கட்டுப்பாடோடும் நடந்தது, உலகமே உற்று கைதட்டிகொண்டிருந்தது எல்லாம் எதுவரை?


அரசுகள் ஜல்லிகட்டுவிளையாட தடையில்லை என சொல்லும் வரை


அதன் பின் தான் இந்த ஜல்லிகட்டினை வைத்து தமிழ்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடும் கொடூர சிந்தனையாளர்களின் மனதில் அச்சம் உதித்தது, போராட்டம் அவ்வளவுதானா? வெற்றியோடு முடிந்துவிடுமா? விட கூடாது என களமிறங்கினர்


அவர்களுக்கு இந்த போராட்டம் தொடக்கத்திலிருந்தே மகிழ்ச்சி அளிக்கவில்லை, பிரபாகரன் எனும் அந்நியநாட்டு தீவிரவாதிக்கு வராத கூட்டம், ராஜிவ் கொலைபாதகர்களுக்கு வராத கூட்டம், எப்படி ஜல்லிகட்டிற்கு மட்டும் குவியலாம் என அவர்கள் மனம் வெம்பிற்று


அதனால்தான் இந்த போராட்டம் அமைதியாக முடியகூடாது என திட்டமிட்டும், மாணவர்களை கேவலபடுத்தும் விதமாகவும் இறுதியில் குழப்ப தொடங்கினர்.


போராட்டம் எதற்கு நடந்தது? சுப்ரீம் கோர்ட் உத்தரவினை மீறி ஜல்லிகட்டு வேண்டும் என கேட்டு நடந்தது. அரசுகளும் அவசரசட்டம் எல்லாம் இயற்றி விளையாடவிட்டன‌


இனி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு எப்படிவந்தாலும் தமிழக எதிர்ப்பினை காட்டி மாற்றும் அளவிற்கு அரசின் கரங்களையும் வலுப்படுத்தியாயிற்று


பெரும் வெற்றியுடனும், உற்சாகத்துடனும் மாணவ செல்வங்கள் கரை ஏறும்பொழுதுதான் இந்த விஷமிகள் குழப்பிவிட்டனர்


தொடக்கம் முதல் நாம் தமிழர், மே 17 போன்ற ஈழமாட்டு அறிவு கொண்ட கும்பலை மாணவர்கள் விலக்கித்தான் வைத்திருந்தனர் , ஆனால் எப்படியோ அவை ஊடுருவிவிட்டன‌


இப்பொழுது போராட்டம் முடியும் நிலையில் கடும் குழப்பம்


யாரால்? இந்த தனிநாடு கேட்ட அழிச்சாட்டிய கும்பல்களால். அவர்ர்கள் நோக்கம் உண்மையில் தனிநாடும் அல்ல, தனி கழிப்பறையும் அல்ல. சும்மா இப்படி கூப்பாடு போட்டு ஒரு கொதிநிலையினை வைத்து குழப்புவதில அவர்களுக்கொரு ஆசை


10 பேர் சாகவேண்டும், 20 பேர் சாக கிடக்கவேண்டும், 30 பேர் ரத்த வெள்ளத்தில் அலையவேண்டும், 100 பேர் பெட்ரோல் ஊற்றிகொள்ளவேண்டும். அதாவது குறைந்தது 500 பேராவது சாகவேண்டும்


அந்த பிணத்தினை வைத்து பாரீர் இனி இந்தியாவில் வாழமுடியாது, தனிநாடு தேவை , கொடுக்கமாட்டான் அடிபட்டு சாவதை விட சயனைடு கடித்து சாவு என பலரை கொன்று கொண்டே இருக்கவேண்டும்


அதனை காட்டி அரசியல் செய்யவேண்டும், இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தாந்தம் அவர்களுடையது, நிச்சயம் அவர்கள் மனிதர்கள் அல்ல‌


அவர்கள் ஆசைக்கு பலிகடா ஆகாமல், ஈழம் அல்ல, ராஜிவ் கொலை அல்ல மாறாக எதற்கு? எப்படி? போராடவேண்டும் என மாணவர்கள் தனியாக சாதித்தை பொறுக்கமுடியாமல் குழப்பிவிட்டார்கள்


தங்களை மீறி மாணவர்கள் போராடி வெற்றியும் பெற்றுவிட்டதில் மகா அப்செட்டான தமிழக அரசியல் கட்சிகளும் இதனை ரசிக்கின்றன, உண்மை.


செத்த வீட்டில் பிணமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், போராட்டம் என்றால் பிராதனாகவும் இருக்க ஆசைபடும் கட்சிகள் அவை, இவற்றை எல்லாம் எப்படி பொறுக்கும்?


அதனால்தான் அவை குறும்பு சிர்ப்புடன் இன்று வேடிக்கை பார்க்கின்றன‌


இந்த ஜல்லிகட்டு பிரச்சினையினை கொண்டு மோடி மீது ஒரு ஆட்டுபுழுக்கையாவது வீசமுடியாதா? என அலைந்து குழம்பிய கும்பல்கள் இன்னொருபக்கம்...


ஆக இதனை எல்லாம் மீறித்தான் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது, அந்த வெற்றியினை பெற்றுதந்த நல்ல சிந்தனை மாணவர்களுக்கு நன்றியும் வணக்கமும்


அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களின் பொய்முகங்களை நீங்கள்தான் உரித்துகாட்டினீர்கள்


போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள்தான் காட்டினீர்கள, உரிமையினை எப்படி மீட்க வேண்டும் என்பதையும்
நீங்கள்தான் காட்டினீர்கள்


அப்படியே இறுதிநேரத்தில் யார் புகுந்தார்கள்? என்ன நடந்தது? எப்படி குழப்பினார்கள்? என்பதும் உங்களுக்கு தெரியும்


அந்த தேசதுரோகிகளை, மதி கெட்ட தேவாங்குகளை, குதர்க்க புத்தி கொண்ட கூமுட்டைகளை மட்டும் அடையாளம் காட்டுங்கள்


அது நிச்சயம் இந்த திருட்டு முருகன் கும்பலும், இந்த அங்கிள் சைமனின் மங்கி கூட்டங்களாகத்தான் இருக்கும்


அவைகளை கைகாட்டிவிட்டு ஒரே ஒரு முறை சொல்லிவிட்டு படிப்பினை தொடருங்கள்


லட்சகணக்கான மாணவர்கள் மாநிலத்திற்காய் போராடினீர்கள், இந்த உறுதியினை கல்வியில் காட்டி பெரும் பதவிக்கு வந்து இந்த சமூகத்திற்கு நல்வழி காட்டுங்கள்


உங்களால் உரிமைகளை பெற்றுகொண்ட சமூகம் உங்களை கையெடுத்து கும்பிட்டு மறுபடியும் கல்லூரிக்கு செல்ல கேட்கின்றது


செல்லுமுன் உங்களின் பெரும் தியாகத்தை கொச்சைபடுத்த துணிந்த அந்த பைத்தியங்களை ரகசிய அடையாளம் காட்டும்படியும் கேட்டுகொள்கின்றது


மாணவ செல்வங்களே, உங்களை உச்சி முகர்ந்து பாராட்டி சொல்கின்றோம், உங்களால் புது நம்பிக்கை பிறந்திருக்கின்றது. உங்களால் பெருமை அடைகின்றோம், ஆனால் உங்கள் பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்த அந்த கும்பல்களை தேடுகின்றோம்


கவலை வேண்டாம், நீங்கள் படிக்க செல்லுங்கள், அந்த பதர்களை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்


நெல்மணி எல்லாம் பிரிந்தபின் கற்கள் தான் கிடக்கும், அப்படித்தான் அவைகள் இன்று மிஞ்சி இருந்து கற்களை எறிந்து அழிச்சாட்டியம் செய்திருக்கின்றன‌


இனி தமிழகத்தின் உரிமைகள் எதனையும் அவ்வளவு எளிதில் பறிக்கமுடியாது எனும் உச்சகட்ட அடியினை கொடுத்தபின்னும் என்ன இருக்கின்றது?


இரு பெரும் அரசாங்கங்களை அலறவிட்ட பெரும் பணியினை செய்துவிட்ட நீங்கள், வருஙகாலத்தில் அந்த அராசங்கத்டின் பொறுப்புமிக்க அதிகாரிகளாக வாருங்கள்


வாழ்த்துகின்றோம்


நாம் அன்றே இந்த திருட்டு முருகனையும், இந்த நாம் குரங்குகளையும் பற்றி சொல்லிகொண்டே இருந்தோம். இவர்களால் ஒரு நாள் பெரும் குழப்பம் தமிழகத்தில் வரும் என்று


எதனையுமே ஒழுங்காக செய்ய தெரியாத பைத்தியங்கள் இதனையும் பெரிதாக செய்வதாக எண்ணி செய்து, பெரும் விவரம் உள்ளவர்கள் போல செய்து மாட்டிகொண்டது


நிச்சயம் விரைவில் சிக்கும், தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதன் பின் இருக்கின்றது அவர்களை எல்லாம் மாட்டு கொம்பில் கட்டி விடவேண்டும்


மாணவர்களே இம்மாதிரி ஆட்களை கூட அடையாளம் காட்டிவிட்டுத்தான் சென்றிருக்கின்றீர்கள், அவ்வகையில் இத்தேசத்திற்கு பெரும் தொண்டாற்றியிருக்கின்றீர்கள்


உங்களை வணங்கி வழியனுப்புகின்றொம், இந்த அரைபயித்தியங்களை நாங்கள் ஒரு வழி செய்ய கைகளை முறுக்குகின்ரோம்


திருட்டு முருகனுக்கும், திண்ணை வீரன் சைமனுக்கும் நாடுகடத்தபடும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது..


முன்பே அவர்களை அடிக்கடி குறிப்பிட்டு சொன்னவர்களும் நாமே


இப்போது அந்த கும்பலின் சுயநல அழிச்சாட்டியத்தை தமிழகம் பார்த்துகொண்டிருக்கின்றது


நிரந்தர தடை நீக்கம் என்பதனை விட இப்போதைக்கு மகா முக்கியமானது, இவர்களின் நிரந்தர சிறைவாசம்..

No comments:

Post a Comment