கலைஞருக்கு பின் சகலத்தையும் பொறுத்துகொள்ளும் ஒரு முதல்வர் உண்டென்றால் அது சாட்சாத் நமது இன்றைய முதல்வர்தான்
எத்தனை வகையான கிண்டல்கள், எத்தனை வகையான மீம்ஸ்கள்
இனிப்புகடை பண்டங்களின் அத்தனை பெயர்களில் அழைக்கபட்டாலும் மனிதர் பொதுவாழ்க்கையில் அசாத்தியமாக இயங்குகின்றார்
ஆட்சி பற்றி ஏதும் சொன்னால் கடும் போக்கு எடுக்கும் கட்சிதான் அது, அக்கட்சியின் தலைவர்கள் வழி வந்திருந்தால் இந்நேரம் மிரட்டல், அவதூறு வழக்கு, பத்திரிகை விரட்டு என கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பார்
இவர் அக்கட்சி என்றாலும் அரசியலில் கலைஞரை பின்பற்றி நடப்பவர் என்பது புரிகின்றது
அதிமுகவில் இருந்து கொண்டே திமுக தலைவரை வழிகாட்டியாக கொண்டு வளர்ந்து இன்று ஆட்சியில் வந்திருக்கின்றார்
இல்லாவிட்டால் இவ்வளவு நிதானம் சாத்தியமில்லை.
அவர் சட்டைபையில் இருப்பதுதான் ஜெயாபடமே தவிர, மனதிற்குள் கலைஞருக்கு கோயிலே கட்டி அனுதினமும் வணங்கி கொண்டிருப்பார் போல தெரிகின்றது
No comments:
Post a Comment