நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடுபவனே உண்மையான "தமிழின துரோகி"
தமிழகத்திற்கு எம்ஜிஆர் ஆற்றியிருக்கும் துரோகம் அப்படியானது, மக்கள் தனக்கு தந்த மகுடத்தில் ஜெயாவிற்கு அறிந்தே பங்குகொடுத்தது அவர்.
ஜெயாவின் குணம் அறிந்தும், பிடிவாதம் அறிந்தும், ஜெயாவினை கட்சியில் விட்டு தீரா தமிழக சாபத்தை உண்டாக்கியவர் அவர்.
அந்த பங்குதான் இன்று சசிகலா,பன்னீர் என வந்து நிற்கின்றது
தமிழகம் அடிமை மாநிலம் ஆக முதல் காரணகர்த்தா இவரே..
தமிழனின் சகல உரிமைகளும் பறிபோக பார்த்துகொண்டிருந்ததும் , ஒன்றையும் தடுக்காமல் தமிழனை அடிமை ஆக்கியதும் இவரே
இவர் காலத்தில் தான் டெல்லி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைந்தது, அணுசக்தி திட்டமுதல் அண்டைநாட்டு பிரச்சினை வரை எல்லாம் ஆரம்பித்து தமிழர்களை நாசமாக்கியதும் இவரே.
கல்வி கொள்ளையின் தொடக்க புள்ளி இவர் போட்டது. தனியார் மதுக்கொள்ளையும், மது ஆலையும் இவரின் சிந்தையில் உதித்தது
அவர் வழியில் அந்த கட்சிதான் தமிழகத்தை இன்று நாசமாக்கி கொண்டிருக்கின்றது
6 முறை தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட கட்சிதான், ஜல்லிகட்டுக்கு தடை போட்டது திமுக என சொல்லிகொண்டிருக்கின்றது
அப்படியானால் 6 வருடமாக என்ன கிழித்தார்கள் என்றால் "அம்மா.." என அழதொடங்குவார்கள் பால்வாடி குழந்தைகளை போல
தமிழகம் இன்று அடைந்திருக்கும் பல சீர்கேடுகளுக்கு அந்த ராமசந்திரன் முதல் காரணம்
அவர் பிறந்த நாளை கொண்டாடுபவனே "தமிழின துரோகி"
என்ன இழவு தமிழகம் இது?
எம்ஜிஆர் , ஜெயா கல்லறைகள் அருகில் இருப்பதால் அண்ணா கல்லறையினை பார்த்து, அது யார் கல்லறை? அண்ணா யார்? ஓஓ அபபடி ஒருவர் இருந்தாரா? என கேட்கின்றது தமிழகம்
இந்த நாள் உண்மையில் தமிழர்கள் வெட்கபட்டு கருப்புகொடி பிடிக்கவேண்டிய நாள்..
எம்ஜிஆரை தமிழகத்திலிருந்து விரட்டாமல் இம்மாநிலம் உருப்பட வாய்ப்பே இல்லை
ஜெயா, சசி, பன்னீர் என யாராவது ஒரு நோயினை அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் அந்த சாக்கடையினை மூடியே தீரவேண்டும்
ஜனவரி 17ஐ புறக்கணிப்போம்.....
பின் ஜெயா மீதான பாசத்தால் கலைஞரை எதிர்த்தார் இது வைகோவின் புதிய நினைவுகள்
No comments:
Post a Comment