Friday, January 13, 2017

பீட்டா தமிழகத்திற்கு புதியது போல‌ ....

ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் : பீட்டா அமைப்பு கடிதம்


பீட்டா தமிழகத்திற்கு புதியது போல‌


இங்கு எத்தனை வீர போராட்டங்கள் நடந்தது, அதன் மூலம் எப்படி எல்லாம் அரசியல் செய்யபட்டது என்பது அறவே தெரியவில்லை.


உள்ளூர் பிரச்சினை எல்லாம் இங்கு அரசியலாகாது, எதிரி வெளியிருந்து வந்தால் தமிழகத்தில் அரசியலில் பின்னி எடுக்கலாம்


அப்படித்தான் ஆரியன், இந்தி, ஈழம் என தமிழகத்திற்கு தொடர்பே இல்லாத பிரச்சினைகளில் கவனமாக அரசியல் நடக்கும் இடம் இது.


தமிழக அரசியலில் இந்தி, ஈழம் வரிசையில் விரைவில் பீட்டாவும் இணையலாம்


இந்தி எதிர்ப்பு சில சர்ச்சை தலைவர்களை உருவாக்கியது, ஈழ ஆதரவு சில பைத்தியங்களை தமிழகத்தில் உருவாக்கியது


அது என்னவோ தெரியவில்லை தமிழகத்தில் பிரச்சினையினை தீர்க்கவருபவர்கள் எல்லாம் தீரா தலைவலிகளாக உருவாகிவிடுகின்றார்கள்


இந்த பீட்டா எம்மாதிரி ஆட்களை உருவாக்க போகின்றதோ தெரியவில்லை பகவானே....

No comments:

Post a Comment