எத்தனை செய்திகளை சுற்றிவந்தாலும் ஜெயாடிவி கொடுக்கும் செய்திகளின் குபீர் சிரிப்பே தனி, திருந்தவே கூடாது என ஜெயா சமாதியில் சத்தியம் எடுத்திருப்பவர்கள் அல்லவா? தொடர்கின்றார்கள்
சின்னம்மா அனுப்பித்தான் பன்னீர் ஜல்லிகட்டினை நடத்த டெல்லியில் பேசினாராம், சின்னம்மா அனுப்பித்தான் எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் சென்றார்களாம், சின்னம்மா ஆளனுபித்தான் மோடி மிரண்டாராம்.
சின்னம்மா அனுப்பித்தான் மீணவர்கள் மீன்பிடிக்கின்றார்களாம், சின்னம்மா அனுப்பித்தான் பெண்கள் தோட்டத்தில் புல்வெட்டுகின்றார்களாம்.
சின்னம்மா சொல்லித்தான் காளைகள் வாடிவாசலுக்கே சில இடங்களில் வந்ததாம்.
இப்படி தமிழகத்தில் சின்னம்மா அனுப்பித்தான் எல்லா காரியங்களும் செய்யபடுகின்றன, அதாவது எல்லோரையும் எங்கும் அனுப்பிகொண்டே இருக்கின்றார் சின்னம்மா
அப்படிபட்ட சின்னம்மா ஜெயலலிதாவினையும் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பியே இருக்கின்றார் என்பது உலகமே அறிந்தது
நாம் சொல்வது ஜெயாவினை அப்பல்லோவிற்கு அனுப்பினார் சின்னம்மா, நீங்களாக ஏதும் கற்பனை செய்துகொள்ள கூடாது.
காமெடியன்கள் என்றாலும் கவனமானவர்கள் விவசாயிகள் எல்லாம் சின்னம்மா சொல்லித்தான் செத்தார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்
No comments:
Post a Comment