Sunday, January 22, 2017

போராட்டம் திசை மாறுகிறது : ஹிப் ஹாப் தமிழன் ..

https://youtu.be/fkNAxUNCgx0

 

அவர் ஹிப்காப் தமிழரோ அல்லது ஹிஹிஹிஹ் தமிழரோ நமக்கு தெரியாது, ஆனால் கோவை நிலவரத்திற்கு பின் அவர் சொல்லும் விஷயங்கள் சரியானவை


அங்கு அப்படித்தான் நிலமை மாறிகொண்டிருக்கின்றது, அங்கென்றல்ல பல இடங்களில் போராட்டம் திசைமாறுகின்றது


எப்படிபட்ட ஊர் கோயமுத்தூர், மகா அமைதியான மக்கள், உழைப்பாளிகள், மரியாதை தெரிந்தவர்கள் என அதன் அடையாளம் உயர்வானவை. அந்த அடையாளத்தில்தான் அது பெரும் தொழில்நகரமாக உருவெடுத்தது


தமிழ்கத்தின் மிக தனித்த அமைதியின் அடையாளமாக இருந்தது கோயமுத்தூர், வெள்ளந்தியான உழைப்பாளிகள் அவர்கள். மிக மிக உற்சாகமான மக்கள் அவர்கள்.


1990க்கு பின் அதன் வரலாற்றில் கரும்புள்ளியாக விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்தன, பின் அது அடங்கியது. ஜல்லிகட்டு விவகாரத்தில் அது மறுபடியும் நிகழகூடாது


அங்கிருக்கும் மதவாதிகளை விரட்டாமல் இனி கோயமுத்தூரை காப்பாற்றமுடியாது என்பது போல் தெரிகின்றது.


ஜல்லிகட்டினை மீட்டெடுத்திருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் பழம்பெரும் தனித்த‌ அடையாளத்தையும் மீட்டெடுக்கட்டும்


கோவை மக்கள் "ரெம்ப" சிந்திக்கவேண்டிய நேரமிது

No comments:

Post a Comment