Tuesday, January 24, 2017

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது


லாரன்ஸ் வந்தேறி, அந்த ஹிப்காப் (அது என்ன ஹிஹிஹிஹ் காப்?) தமிழன் வந்தேறி, பாலாஜி வந்தேறி, அவர்கள் துரோகம் செய்ததால் போராட்டம் கலைக்கபட்டது என ஓப்பாரி தொடங்கிவிட்டது


அடேய்




காவல்துறையினை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் பச்சை தமிழன், அவரின் ரிமோட்டை வைத்திருக்கும் சசிகலா தமிழச்சி, சசிகலாவினை ஆட்டிபடைக்கும் நடராஜன் பச்சை தமிழன்


நடராஜனின் தோழர்கள் நெடுமாறன், சீமான் எல்லாம் பச்சோந்தி தமிழர்கள்


ஆக காவல்துறையினை ஏவிவிட்டது தமிழர்கள், காவல்துறையின் கலவர தடுப்பு பிரிவாக வந்த துணை கமிஷணரும் தமிழர், அந்த காவலர்களும் தமிழர்கள்.


இத்தனை களபேரம் நடக்கும் பொழுதும் ஆட்சியின் நிழல் முதல்வரான நடராஜனின் பெரும் கூட்டாளிகளான நெடுமாறன், கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் ஏதும் அவரிடம் கோரிக்கை வைத்து பார்த்தீர்களா?


நடராஜன் நினைத்தால் நடக்காத காரியம் தமிழகத்தில் உண்டா?


நீங்கள் கண்டிப்பதாக இருந்தால் அடிக்க உத்தரவிட்ட, அடித்த அந்த "தமிழர்களை" கண்டிக்க வேண்டுமா?


அல்லது அமைதியாக போராட ஊக்கம் கொடுத்து, வெற்றி கிடைத்தபின் கலைந்து செல்ல சொன்ன, ஒரு உயிருக்கும் கேடின்றி போராட்டத்தை முடித்த இவர்களை கண்டிக்க வேண்டுமா? ஆனால் ஏன் ஒருவரும் செய்யவில்லை?


இதனை கண்டிக்காத உங்களை எல்லாம்.......


உங்களுக்கு தேவை என்ன? கலவரம், பிணம் அதனை வைத்து அரசியல்


அவ்வளவுதானே சிரியாவிற்கு செல்லுங்கள், ஈராக்கிற்கு செல்லுங்கள், கலிங்கப்போர் பிணமாக கிடக்கும் அந்த குவியலை கண்டு அலறுங்கள், அறற்றுங்கள்


இல்லை இல்லை, தமிழர் பிணம் தான் வேண்டுமென்றால் அது நிச்சயம் கிடைக்கும் ஆனால் அதனை காண நீங்கள் இருக்கமாட்டீர்கள்


எவனும் தன் பிணத்தை தன்னால் பார்க்க முடியாது அல்லவா? அந்த வகையில் நீங்களும் பார்க்கமுடியாது.



No comments:

Post a Comment