Friday, January 20, 2017

முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்





Image may contain: 1 person


ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி


ஆக அவசர சட்டத்திற்கு முன்பே வாய்ப்பு இருந்திருக்கின்றது, ஆனால் உங்கள் புரட்சிதலைவி, இதய தெய்வம் அதனை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்கின்றீர்கள்


அந்த தலைவி தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கின்றார் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றீர்கள்


உங்கள் புரட்சி தலைவி பிறப்பிக்காத அவசரசட்டத்தை நீங்கள் பிறப்பிக்க போகின்றீர்கள் வாழ்த்துக்கள்.


ஆக இப்படி ஒரு வாய்ப்பு தமிழர்கள் பொங்கி எழுந்தால்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றது அல்லவா?


பாருங்கள் பன்னீர் செல்வம், இத்தனை முறை முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள், இப்படி ஒரு வழி இருப்பது தெரிந்ததா?


தமிழகம் எப்படி புரிய வைத்திருக்க்கின்றது பார்த்தீர்களா? இன்னும் நிறைய புரியவைக்கும்,


4 வருடத்தில் நீங்கள் பெரும் சட்டமேதையாகவே பதவி விலகுவீர்கள். அவ்வளவு சட்டங்களை நீங்கள் இனி படிப்பீர்கள்


உங்களின் இந்த வாக்குறுதியினை நம்பி கலைந்து செல்ல முடியாது.


முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்


நீங்கள் டெல்லியிலிருந்து டிவியில் பார்த்துவிட்டு வந்தால் போதும்


போராளிகள் ஜல்லிகட்டு ஆதரவாளரே தவிர, வீரர்கள் அல்ல. அவர்கள் களம் புகும் அவசியம் இல்லை, அதற்கு வீரர்கள் உண்டு, அதனால் போராளிகள் சாவகாசமாக இங்கே அமரலாம்.


3 நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நீங்கள் உறுதிகொடுக்கும் "ஓரிரு நாட்கள்" அதிகமில்லை, பிரச்சினை இல்லை


உங்களுக்கும் சென்னையில் பெரும் வேலை இருப்பதாக தெரியவில்லை


அதனால் முதலில் வாடிவாசல் திறக்கட்டும் ஜல்லிகட்டு நடக்கட்டும்


அதன் பின் நீங்களும் வாருங்கள், அவர்களும் கலைவார்கள்.


அது இருக்கட்டும்


2 வருடமாக இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் அதனை செய்யாத உங்கள் தலைவியினை இனி கிழிய கிழிய திட்டுவார்களே


தடுக்கமுடியுமா பன்னீர் செல்வம்?
















































No comments:

Post a Comment