Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டும் புறநானூறும்....

இதே திமுக அமைச்சரவை என்றால் புறநானூறை புரட்டி, அக நானூறை அறுத்து , சங்க இலக்கியங்களை பிழிந்து தமிழன் எப்படி ஏறு தழுவினான் என விளக்குவார்கள்


அதாவது மாடு இவ்வளவு உயரம் இருந்தது, இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன, அது அப்படி இது இப்படி என கொஞ்சம் சமாளிக்கவாது செய்வார்கள்


ஜல்லிகட்டு நடந்தது, ஆனால் இப்பொழுது நடப்பது போல் அல்ல, நமது தரப்பு நியாயத்தை தகுந்த ஆதாரத்தோடு சமர்பிக்க வேண்டும், அதற்கு காலம் வேண்டும்




அதனால் "தமிழறிஞர் குழு" அமைக்கபட்டு அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபடும் என ஏதாவது சொல்வார்கள், தகுந்த கருத்துக்களோடு சமாளிப்பார்கள்


அவர்கள் ஸ்பெஷாலிட்டி அது.


போதாகுறைக்கு கலைஞர் புறநானூற்று எடுத்துகாட்டை எல்லாம் எடுத்து வீசுவார்


இந்த அரசில் உள்ளவர்களுக்கு தமிழே சரியாக வரவில்லை, பின் எப்படி இந்த இலக்கிய எடுத்துகாட்டுக்களை எல்லாம் எதிர்பார்க்கமுடியும்?


ஒன்று அழுவார்கள் அல்லது அமுக்கி வைத்த புளிமூட்டையாக அப்படியே இருப்பார்கள் அவ்வளவுதான்.


இப்பொழுது பாருங்கள், எப்படி சமாளிக்க வேண்டும் என சத்தியமாக அவர்களுக்கு தெரியவில்லை


தவிக்கின்றார்கள்.



No comments:

Post a Comment