Saturday, January 21, 2017

கேள்வி கேட்கிறானாம் கேள்வி?





எவனோ ஒருவன் முகநூலில் போராட்டகாரர்களுக்கு 50 கேள்விகள் என அடுக்கிகொண்டிருக்கின்றான்


அவன் 50 அல்ல 500 கேள்விகள் அடுக்கினாலும் ஒரே பதில்தான்


தமிழகத்திலும் ஒரு பெரும் கூட்டம் எந்த தலைவனின் அழைப்புமின்றி கூடமுடியும் , அது முதல்வரை அலறி அடித்து ஓடவைக்க முடியும் , டெல்லியினை யோசிக்க வைக்க முடியும் காட்டினோமா இல்லையா?





என்ன சொன்னாய்? போலிஸ் ஆதரவாக இருக்கின்றதா? கிட்டத்ட்ட 800 இடங்களில் திரண்டிருக்கும் மக்களை என்ன செய்து அடக்க முடியும்? உலகம் கவனிக்கும்பொழுது அது சர்வதேச சிக்கல் ஆகாதா?

மக்கள் எழுச்சிக்கு முன் அரசு மண்டியிடுகின்றது புரிகின்றதா?

நீ தனியாக இருந்து 5000 கேள்விகளை எழுப்பி நீயே தனியாக பதில் எழுதிகொள், மனப்பாடமாக படித்துகொள். எங்களுக்கு என்ன?

எம்மிடம் இருப்பது ஒரே பதில்தான். பெரும் அச்சத்தை ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் மவுன ஆதரவாளரான உன் போன்றவர்களுக்கும் தமிழகம் ஏற்படுத்தியிருக்கும் அச்சம்

அந்த அச்சமும் யோசிப்பும் வெற்றியினை நோக்கி போராட்டத்தை நகர்த்துகின்றன, அதனை நெருங்கிகொண்டிருக்கின்றோம்

முதலில் தடை விலகட்டும், அதன் பின் எத்தனை முறை யோசித்து கைவைப்பார்கள் என்பது உனக்கே புரியும்

சரி எங்களுக்கு வேலை இருக்கின்றது, நீ தாளில் 50, 500, 5000000 என கேள்விகளை எழுதிகொண்டே இரு....








No comments:

Post a Comment