Saturday, January 21, 2017

திருநாவுக்கரசர் வேதனை.... குஷ்பு சாதனை...



எம்ஜிஆருக்கு பின் ஆர்.எம் வீரப்பன் முதல்வராக இருந்த வாய்ப்பினை நானே கெடுத்தேன், அதன் விளைவால் தமிழ்நாடு நாசமாய் போயிற்று, அதிமுகவிற்கு யாரோ உரிமை கொண்டாடுகின்றான் : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதனை


இவர் இப்பொழுது காங்கிரஸ் கட்சி அல்லவா?, பின் ஏன் கடந்த காலங்களை பற்றி இவ்வளவு கவலைபடுகின்றார். இவர் கெடுத்த கெடுதல் யாருக்கு தெரியாது?


அதனால் அதிமுகவில் மீண்டும் இணைந்து அன்று செய்த அதே தவறை இன்று சரிசெய்தால் என்ன? செய்யலாம் அல்லவா? யார் தடுத்தார்கள்


அன்று இவர் அதிமுகவினை கெடுத்தது போல தமிழக காங்கிரஸையும் கெடுத்துவிடலாம், அதனால் இவர் செய்ய வேண்டியது என்ன?


தலைவி குஷ்பூவினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கிவிட்டு இவர் ஓதுங்கிவிடலாம், இல்லாவிட்டால் இன்னொரு நாளில் வேறு கட்சியில் குஷ்பூ பெரும் பதவிக்கு வந்துவிட்டால் என்ன சொல்வார்?


அன்று குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவரானால் தமிழகம் உருப்பட்டிருக்கும் என வருதுவாரா இல்லையா? ஆனால் ஆகபோவது என்ன?


அதனால் இன்றே தமிழக காங்கிரஸினை குஷ்பூவிடம் ஒப்ப்டைத்துவிட்டு இவர் அதிமுகவில் இணைந்து தவறை சரி செய்தல் நல்லது.












ஏன் எங்கள் அபிமான குஷ்பூ அரசியலுக்கு மகா பொருத்தமானவர் என சொல்கின்றோம் என்றால், அவருக்கு ஏன் இத்தனை லட்சம் ரசிக கண்மணிகளும் தொண்டர் படையும் இருக்கிறது என்றால் இந்த முழக்கத்திற்காகத்தான்

இப்படி பீட்டாவினை செவிட்டில் அறைந்தது போல கேள்வி எழுப்பும் தமிழக அரசியல்வாதி யாராவது உண்டா? நிச்சயம் இல்லை

ஆங்கில அழகென்ன, அதன் உச்சரிக்கும் கோப தொணி என்ன?


ஆங்கிலமே இன்று அழகானது அவரால்..

எங்கள் பெண் சிங்கம் கர்ஜிக்கும் அழகு என்ன கம்பீரம்? எத்தனை துல்லியம்?

வாழ்த்துக்கள் குஷ்பூ, உங்கள் முழக்கம் இன்னும் பல உரிமைகளை தமிழகத்திற்கு மீட்டு தரட்டும்..

எங்களோடு எங்களாக முழங்கியதற்கு கோட்டான கோடி நன்றி





















































No comments:

Post a Comment