அன்று இந்தி கட்டாய மொழி, எல்லா தமிழரும் இந்தி கற்றே தீரவேண்டும் என அறிவிக்கபட்டது, தமிழகம் பொங்கியது
என்னை மீறி இந்தி வந்துருமாண்ணேண்... என சீறினார் காமராஜர்
உங்களை மீறி வந்தால் ,நாங்கள் தடுக்கட்டுமா என களமிறங்கியது திமுக, தமிழக மாணவர்படை களம் இறங்கியது
அதாவது ஆளும் கட்சியும் தமிழருக்காக நின்றது , வலுவான எதிர்கட்சியும் தன் பங்கினை செய்து அசத்தியது.
முடிந்தவரை முரண்ட டெல்லி அதன்பின் இந்தி கட்டாயம் அல்ல என இறங்கி வந்தது
இந்த வீரவரலாற்றை, புரட்சி வரலாற்றை மொத்த இந்தியாவிற்கும் அன்று செவிட்டில் அடித்து சொன்னது இதே தமிழகம்
50 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் அப்படித்தான் இருந்தது.
இன்று ஆளுங்கட்சிக்கும் மயக்கம், வலுவான எதிர்கட்சிக்கும் கோமா, தமிழக அரசியல் வீழ்ச்சி இது
விளைவு போராட்டம் மக்கள் கையில் சென்றிருக்கின்றது, மொத்த தமிழகமும் பொங்கி நிற்கின்றது, ஏதோ ஒரு வாய்பிற்கு தமிழகம் காத்திருந்தது என்பதும், ஜல்லிகட்டில் அது வெளிபட்டிருக்கின்றது என்பதும் உண்மை
"உங்களுக்காக நான், உங்களுக்காகவே நான்" எனும் வெற்று கோஷம் மீது மண் அள்ளிபோட்டாயிற்று, "நமக்கு நாமே" என நாமம் சாத்த கிளம்பியவரையும் தள்ளி வைத்தாயிற்று
இது "தமிழர் தமிழகத்திற்காக, தமிழரெல்லாம் தமிழகத்திற்காக", "தமிழருக்கு தமிழரே"
என கிளர்தெழுந்திருப்பது எல்லா அரசியல்வாதிகள் முகத்திலும் கரியினை பூசியிருக்கின்றது
ஆளும் கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சியின் வீழ்ச்சி நன்றாக தெரிகின்றது
பெருகும் ஆதரவில் போராட்டம் வெல்வது நிச்சயம்
அரசும், எதிர்கட்சியும் மாநிலத்தில் தன் கடமையினை சரிவர ஆற்றவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை தமிழகம் உலகிற்கு காட்டிகொண்டிருக்கின்றது
No comments:
Post a Comment