Friday, January 13, 2017

மோடி என்னதான் பேசுகிறார்?

பண தட்டுப்பாடு விவகாரத்தால் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்: ஹிந்து மகாசபை பொதுச்செயலாளர் திட்டவட்டம்


மோடியின் அஸ்திவாரமே இந்த அட்டை கோபுரம் நிலைக்காது என சொன்னபின் இனி பேச என்ன இருக்கின்றது


ஹிந்து மகாசபை தலைவருக்கே பணமதிப்பு தட்டுபாட்டால் கோபம் வந்து அறிக்கைவிட்ட பின் என்ன சொல்வது??





அவ்வளவு பெரும் சறுக்கலை மோடி சந்தித்திருக்கின்றார்..





காந்தி கண்ட கனவு ராம ராஜ்யமே பிரதமர் மோடி பேச்சு


பின் எதற்கு அவரை கோட்சே எனும் தியாகி சுட்டான்? கொஞ்சநாள் காந்தி இருந்தால் ராமராஜ்யம் அமைத்துவிடுவார் என்றுதானே?


அப்படியானால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும், கோட்சேக்கும் ராம ராஜ்யம் அமைவது பிடிக்கவில்லை அல்லவா?


எப்படிபட்ட துரோகம் செய்திருக்கின்றான் கோட்சே??


பின் ஏன் உங்கள் பக்கத்திலிருந்து சிலர் கோட்சே தியாகி, காந்தி சதிகாரன் என சொல்லி கொண்டிருக்கின்றார்கள்?


ஏதும் பாகிஸ்தான் உளவாளிகளாக இருப்பார்களோ?


அந்த "காந்தி" துரோகிகளை கண்டுகொள்ளுங்கள் மோடி


ராமராஜ்யம் அமைக்கபோகின்றார்களோ இல்லையோ?


ராமயணத்து வானரங்களின் ராஜ்யம் அமைந்த திகைப்பில் இருக்கின்றது இந்தியா


அதன் கையில் கிடைத்த பூமாலையாக இந்நாடு சீரழிந்துகொண்டிருக்கின்றது..






வியட்நாம், ஆப்கனுனில் இந்திய தலையீடுபற்றி சிலர் மோடியினை விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள்


அவர் அடுத்தநாட்டு பிரச்சினை பற்றி கவலைபட கூடாதாம்


அவர் உள்நாட்டு பிரச்சினை பற்றி ஒன்றும் பேசமுடியவில்லை, செய்யவும் முடியவில்லை, ஒரு பிரயோசனமுமில்லை




இதில் அவர் வெளிநாட்டு பிரச்சினையும் பேசுவதும் அனாவசியம் என்றால் எப்படி?


அவர் என்னதான் செய்வார்? என்னதான் பேசுவார்?








No comments:

Post a Comment