Monday, January 23, 2017

மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்...






அம்மா இறந்த துக்கத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ரத்து செய்கின்றோம் என சொல்ல ஒருவனுமா அக்கட்சியிலோ அரசிலோ இல்லை?? :)

அப்படி சொல்லிவிடத்தான் முடியுமா?


ஆனாலும் கொஞ்சமேனும் துக்கம் இல்லையா? அது எப்படி இருக்கும், அவர் செத்து 50 நாட்களுக்குள் ராமசந்திரனுக்கு 100ஆண்டு என கொண்டாடிய கூட்டம்தானே அது.





ஜல்லிகட்டு போராட்டம் வெற்றியில்தான் முடிந்தது, போராடிய நோக்கம் நிறைவேறி விட்டது.

அந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்

ஒரு காரியத்திற்காக தமிழகம் அடித்த அடிதான், ஆனால் இனி ஓவ்வொரு காரியத்திலும் அது அரசின் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும்


ஆட்சியாளர்கள் கண்ணில் அந்த மரண பயம் தெரிந்துகொண்டே இருக்கும்

தங்களை தமிழகம் கண்காணிக்கின்றது எப்பொழுது வேண்டுமானாலும் அது திரளும் என்ற அந்த பயத்திலே அவர்கள் ஆளட்டும்






No comments:

Post a Comment