இன்று அறிவிப்பினை வெளியிடுவார் தீபா என ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
சசிகலாவிற்கும் தீபாவிற்கும் நடப்பது கட்சியினை கைபற்றும் போட்டி ஒருபுறம் என்றாலும், ஜெயாவின் நடை, உடை பாவனையினை கைபற்றுவது யார் என்பது இன்னொரு புறம் நடக்கின்றது
ஜெயாவின் பேச்சு என சசிகலா மாற, ஜெயாவின் அதிராமல் பேசுதல் எனும் பாணியினை தீபா கையில் எடுத்தார்
இப்பொழுது ஜெயா போலவே தீபா கோட் போட்டவுடன் மகா அவசரமாக ஜெயா போலவே சசிகலா கொண்டை போட்டு கொண்டிருக்கின்றார்.
இவர்கள் இப்படி சிந்திக்க, உண்மையான அதிமுக தொண்டன் இப்படி சிந்திக்கின்றான்
இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் ஜெயா போலவே இருவரும் செய்ய போகின்றார்களோ தெரியாது,
ஆனால் ஜெயாவினை பின்பற்றி இரண்டு பேரும் அப்பல்லோவில் சேர்ந்துவிட்டால் கட்சிக்கு ரொம்ப நல்லது.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ.தீபா மரியாதை
ஜெயா தீபாவிற்கு அத்தை, அஞ்சலி செலுத்தியதில் அர்த்தம் இருந்தது,
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஏன் அஞ்சலி?
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்: ஜெ. தீபா பேட்டி
ஏற்கவனே அவர்கள் ஆற்றிய மக்கள் பணியால்தான் இவ்வளவு சிக்கல், இதில் அவர்கள் ஆசியோடு இவர் வேறா?
பாவம் தமிழன், அவனுக்கு விமோசனமே இல்லை...
No comments:
Post a Comment