Friday, January 20, 2017

பீட்டா ஆதரவாளர் ராதா ராஜனின் கொச்சையான விமர்சனம்



Image may contain: 1 person, text



மிக மிக சீரியசாக கண்டிக்க வேண்டிய விஷயம் இது, காமெடிக்கெல்லாம் இடமே இல்லை


100 பேருக்கு மேல் ஒரு கூட்டம் கூடவேண்டுமென்றால் சென்னையில் அங்குதான் கூட்டவேண்டும் அப்படித்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டமும் தொடங்கியது, அது வெற்றிபெறும் நிலையினை எட்டியிருக்கின்றது


மொத்த தமிழகம் பொங்கியதும் மத்திய அரசே பின் வாங்கிற்று, இனி இந்த எழுச்சியினை உச்சநீதிமன்றமும் தடுத்துவிடமுடியாது, இந்த அவமானத்தில் முகம் தொங்க போட்ட பீட்டாவும், இறைச்சிக்கும் தோலுக்கும் விலங்குகள் கொல்லபடும்பொழுது கண்ணை மூடும் விலங்கு ஆர்வலர்களும் அரற்றுகின்றனர்


அதில் ஒன்றுதான் இந்த ராதா ராஜனோ, ராத்திரி ராஜனோ


அம்மணிக்கு பொறுக்கவில்லை, மிக மட்டமாக பேசியிருக்கின்றார் அதாவது மெரினா மோசமான இடமாம், உடலுறவு இலவசம் என்றாலும் அங்கு கூட்டம் கூடுமாம்


வயிற்றெறிச்சலில் வார்த்தைகள் வருவது சகஜம் தான், காளை முட்டி 4 பேர் சாவுங்கள், காளைக்கு கொம்பு முளைக்காமல் போகட்டும் என சாபமிட்டால் சரி


ஆனால் குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் எல்லாம் கூடியிருக்கும் பொழுது இவர் இப்படி பேசுவது தாங்குமா?


உடலுறவு கிலோ என்னவிலை, எங்கு கட்டணம்? எங்கு இலவசம் என்பதெல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் மெரினாவில் இலவசம் என்று இவர் சொல்லியிருப்பது அவர் ஆராய்சி


எங்காவது படகுக்கு அடியில் படுத்து மறைந்து பல விஷயங்களை பார்த்து , ஆராய்ந்து கட்டுரை எழுதியிருக்கலாம், அவர் சாகசம் அப்படி இருக்கலாம்.


ஆனால் இப்பெரும் போராட்டம் வெற்றி பேறும்பொழுது ஏன் இப்படி பேசவேண்டும்?


விலங்குகளோடு பழகி பழகி விலங்கு போலவே சிந்தின்றார், அதாவது மிருக மந்தையில் இருபால் விலங்குகள் என்ன செய்யுமோ அப்படி சிந்திருக்கின்றார்.


விலங்கோடு விலங்கானால் புத்தி இப்படித்தான் போகும், ஆனால் ஆடை எல்லாம் உடுத்தியிருப்பதால் இப்போதைக்கு பிரச்சினை இல்லை


ஏம்மா ராத்திரி ராதா


காந்தி அன்று மெரினாவில் பேசும் பொழுதும், பாரதியாரும் வஉசியும் முழங்கும்பொழுது கூட்டம் எதற்கு கூடிற்று?


அண்ணாவும் கலைஞரும் கண்ணதாசனும் முழங்கும்பொழுது கூட்டம் எதற்கு கூடிற்று?


அட அவ்வளவு ஏன் தினகரன் கோஷ்டி கடலுக்கு கர்த்தரை அறிவிக்கும்பொழுது கூடிய கூட்டம் எதற்கு கூடிற்று?


ஈழ அமைப்புகள் கடலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்தும்பொழுது கூடிய கூட்டம் எதற்கு கூடிற்று?


காந்தி காலத்தில் நீங்கள் இல்லை, அண்ணா காலத்திலும் இல்லை ஆனால் தினகரன் காலத்திலும், ஈழஅமைப்பு காலத்திலும், இன்னும் பல மாநாடுகள் நடக்கும்ப்பொழுதும் இங்குதானே இருந்தீர்கள்? சொன்னீர்களா


ஜெயா அடக்கம் நடைபெறும் பொழுது கூடிய கூட்டம் என்ன? அப்பொழுது சொன்னீர்களா? இந்த வார்த்தையினை சொன்னால் என்ன? முடியுமா?


இப்பொழுது மட்டும் சொன்னால் என்ன வயிற்றெறிச்சல் இருக்க வேண்டும்?


நமது வீட்டு மாட்டினை நாம் தொட்டு ஆடும்பொழுது எங்கிருந்தோ வந்து ஏய் ஆடாதே என்பார்களாம், நாமும் பொத்திகொண்டு போகவேண்டுமா? என மானத்தில் பொங்கி கடற்கரையில் கூடிய கூட்டத்தினையா அவமானபடுத்தினீர்கள்


முடியாது, நிச்சயம் நீங்கள் தமிழராய் இருக்கமுடியாது, தமிழ்பேசினாலும் சேர்த்துகொள்ள முடியாது


எனினும் ஒரு வேண்டுகோள்


கொஞ்சநாளைக்கு மும்பை சன்னிலியோன் அருகே சென்று பதுங்கிகொள்வது உங்களுக்கு நல்லது, காரணம் அவர்தான் இந்திய பீட்டா தூதுவராம், உங்கள் நட்பு வட்டம்தான்


இந்த கட்டணமில்லா உடலுறவு எங்கே கிடைக்கும் என்பது அம்மணிக்கு நன்றாக தெரியும் விசாரித்துகொள்ளவும்


பீட்டா அதனைத்தான் ஊக்குவிக்க வந்தது, இல்லாவிட்டால் சன்னிக்கு விருது கொடுக்கும் அவசியம் என்ன?


இனி உங்களுக்கும் தரும், சன்னிக்கும் உங்களுக்கும் ஒரே விருது


விருதினை நீங்கள் வைத்துகொள்ளுங்கள், எருது விஷயம் உங்களுக்கு வேண்டாம்


மெரினாவில் எதற்காக கூடினார்கள் என்ற சந்தேகம் இன்னும் உங்களுக்கு இருக்கின்றதா? தீர்த்துவிடலாம்


ஜல்லிகட்டு வேண்டும் என குரலெழுப்பியவர்கள் மெரினாவில் கூடினார்கள், போராடினார்கள்


அப்படி நீங்களும், சன்னி லியொனும் இன்னும் பலரும் மெரினாவில் இலவச உடலுறவு என அறிவித்துபாருங்கள், முடியுமா?


எவ்வளவு கூட்டம் வருகின்றது என அப்பொழுது புரியும்


அதனை செய்யுங்கள், பீட்டாவின் சிறந்த மனிதர் என புகழபடும் சன்னிலியோன் தயாராக இருக்கின்றார், எதற்கும் தயாராக நிற்கின்றார்


மான உணர்வுக்கு கூடும் கூட்டமென்ன என்பதும், நீங்கள் சொல்லும் காரியத்திற்கு கூடும் கூட்டமென்ன என்பதும் அன்று விளங்கும்


மெரினாவில் ஜல்லிகட்டிற்காய் கூடிய இளைஞர் சார்பாக இந்த சவாலை ஏற்றுகொள்ள முடியுமா?




No comments:

Post a Comment