Monday, January 23, 2017

போராட்டத்தில் தலைவனோ தலைமையோ உருவாகவில்லை...





இவ்வளவு பெரும் போராட்டம் நடந்திருக்கின்றது, இதிலிருந்து கூட ஒரு தலைவனோ தலைமையோ உருவாகவில்லை


இதே போன்றதொரு போராட்டங்கள் பலவற்றில்தான் பெரியார், கலைஞர் எல்லாம் தானொரு மிகபெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்பது வரலாறு.


ஆக ஆற்றல்மிக்க வருங்கால தலைமுறை தலைவனுக்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருத்தம் மிஞ்ச பார்க்க வேண்டியிருக்கின்றது





நிச்சயம் இப்போராட்டம் ஒரு நம்பிக்கை தலைவனை காட்டியிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனும்பொழுது நல்ல தலைவன் உருவாகவில்லை என்பது தெரிகின்றது

வருங்கால தமிழகத்தை வழிநடத்த ஒரு இளம் தலைவன் இல்லை என்பதைத்தான் இப்போராட்டம் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றது

அற்புதமான எழுச்சி, ஆனால் நெறிபடுத்தி செல்ல தலைவன் இல்லை. அவன் தான் இல்லை. ஒரு குழுவாவது உண்டாகியிருக்கலாம்

அடுத்த வருங்கால தலைமுறையினை நல்வழியில் நடத்த ஒரு தலைவன் இதில் தெரிவான் என்ற நம்பிக்கை இப்போது பொய்த்திருக்கலாம்.

ஆனால் இந்த எழுச்சியில் ஓசைபடாமல் உள்ளூர அப்படி ஒருவன் உருவாகிகொண்டிருக்கலாம், வருங்காலத்தில் அவன் வரலாம். வரவேண்டும்

வந்தால்தான் தமிழகம் புதுபாதையில் திரும்பும், எழுச்சியும் ஆற்றலும் புதிய சிந்தனையும் மிக்க ஒரு இளம் தலைவன் தமிழகத்திற்கு தேவை, வருங்காலத்தை அவனே நடத்தவேண்டும்

ஒருகாலத்தில் வந்து நடத்துவான்..

அக்காலம் வரும் வரை என்ன நடக்கும்?

சசிகலா கொண்டை முடியபடும்

பெரிய சாணக்கியனின் நீண்ட கொண்டை அல்லவா? ,

சபதம் வெல்லும் பொழுது அள்ளி முடியத்தான் வேண்டும்

சசிகலாவின் கொண்டை தமிழகத்திற்கு சிம்பாலிக்காக சொல்ல வருவது அதுவே...

30 வருட சபதத்தில் வென்று அள்ளி முடியபடும் கொண்டை அது..








No comments:

Post a Comment