Thursday, January 19, 2017

ஏ.ஆர் ரகுமான் கண்டனத்தை தெரிவித்து உண்ணாவிரதம்...



Image may contain: 1 person, close-up


தன் பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்களாகவும், அடுத்தவர் பிரச்சினைக்கு நீதிபதிகளாவும் மனோபாவம் கொண்டிருந்த தமிழர்களை, பாதிக்கபட்டவர்களாக கத்தும் ஓரே புள்ளியில் நிறுத்தியிருப்பதற்காக பீட்டாவிற்கு நன்றி


போராட்டம் வெற்றிபெற்றபின் காளை படம் போட்ட நினைவு பரிசினை தமிழர் சார்பாக அனுப்பவேண்டும்


எதிலும் வாய்திறக்காத ஏ.ஆர் ரகுமானே கண்டனத்தை  தெரிவித்து போரட வந்திருப்பது வியப்பானது


ஆனால் அவர் தனியாக உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல, மோடி அரசின் மீது இஸ்லாமிய வெறுப்பு என மதசாயம் பூசிவிடுவார்கள், இங்கு எல்லா வதந்தியும் சாத்தியம்


மதிப்பிற்குரிய ரகுமான் போராட்டகாரர்களுக்கு நிதி மற்றும் நேரில் ஆதரவு போன்ற உதவிகளை செய்தால் போதும்


ஆஸ்கர் விருதுபெற்றவர் , அந்த மேடையிலே தமிழில் முழங்கியவர் இப்படி நேரில் கலந்துகொண்டால் போராட்டம் இன்னும் வலுக்கும், உலகளாவிய பார்வை கிடைக்க்கும்


தனியாக அமர்வார் ஆனால் ஊடக வெளிச்சம் போராட்டகாரர்களை விட்டுவிட்டு இவர் மீது பாயும்


பெரும் மதிப்பிற்குரிய ரகுமான் கொஞ்சம் நிதானித்து சிந்திக்கட்டும்


"எல்லா புகழும் இறைவனுக்கே" என்பார் ரகுமான்


அந்த புகழை மெரினா கூட்டத்தினரை, அல்லது மதுரை கூட்டத்தினர‌ சந்தித்து தேடி கொண்டால்தான் என்ன?


இறைவனுக்குத்தானே புகழ்..








 ஏ ஆர் ரகுமான் உண்ணாவிரதத்தை முடித்த பிறகு .....



https://youtu.be/sqIThchfhYs




 

No comments:

Post a Comment