ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்?
ராஜபக்சேயே மெரினா வந்து, கூட்டத்தில் நின்று "தமிலெருக்கு ஜொல்லிகொட்டு வோணும்" என பிரபாகரன் படத்தோடு நின்றிருக்கலாம்..
வாட்டாள் நாகராஜ் கூட ஒரு ஜல்லிகட்டு பேனருடன் மெரினா வந்து போயிருக்கலாம்,
யாருக்கு தெரியும்?
இதில் தீபா எல்லாம் எந்த மூலைக்கு...
சென்னையா? இல்லை பெங்களூருக்கே போய்விட்டாரா?
எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும்
கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் குண்டு கட்டி மருத்துவமனைக்குள் புகுந்தல், ராணுவ வீரன் உடையணிந்து அரச கட்டத்துக்குள் புகுந்து சுடுதல் போன்ற பெரும் வீர தந்திரங்கள் புலிகளிடம் உண்டு
அது புலிபடம் பிடித்தவர்களிடமும் இருக்காதா என்ன?
காவலர் உடையில், கேமரா முன் ஆட்டோ கொளுத்த எவ்வளவு நேரமாகும்?
இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என கேட்டால்...
அங்கிள் சைமன் முன்பு ஈழம் செல்லும் பொழுது வியப்பும் திகைப்பும் நிறைந்த ஈழபயணம் செல்லும்பொழுது அவரையே மாறுவேடம் போட சொன்னதாக அவரே சொல்லியிருக்கின்றார்
இதனை விட பெரும் ஆதாரம் என்ன வேண்டும்?
டேய் இந்த இத்துப்போன பஸ்டாண்டுக்கு எல்லாம் என்னால வரமுடியாது, ஒரு சுத்தமான டீக்கடைக்கு கூட வழிய காணோம்.
டீக்கடைய விடு, பஸ்டாண்டு போர்டுக்கே பெயிண்ட் இல்லை. அது காந்திஜி பேருந்து நிலையமா? இல்ல சாந்தினி பேருந்து நிலையமாண்ணு கூட தெரியல..
நீ ஆம்பிளைனா லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வாடா, டேய் வாடா. நீ சுத்தமான நாடார் என்றால், உன் உடம்புல ஓடுறது சுத்தமான நாடார் ரத்தம் என்றால், சுத்தமான லண்டன் ஏர்போர்ட்டுக்கு வந்து என்ன பாருடா.
அந்த ஏர்போர்ட்ல தாண்டா பர்கர் சாப்பிட்டு கொண்டிருகின்றேன்
சாதி சண்டைய லண்டன் ஏர்போட்டிலோ அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலோ வைத்துகொள்ளலாம் வாடா..
நீ ஆம்பிளைனா வாடா, நான் லண்டன் ஏர்போர்ட்ல இருக்கேன் வாடா ....
கர்நாடகாவில் எருது பந்தய வீரவிளையாட்டுக்கு அனுமதி வேண்டும் : சித்தராமையா
டேய் வாட்டாள் நாகராஜ், இந்த உரிமையினை கூட இழந்துவிட்டுத்தான் காவேரியில் குப்புற படுத்து அடம்பிடிக்கின்றீரா?
இதனை எல்லாம் மீட்கவேண்டும் என விருப்பம் இல்லையா? அல்லது முடியவில்லையா?
உங்கள் மாநிலத்தில் தடை என்றால் அந்த எருது விளையாட்டை தமிழகத்தில் வந்து நடத்துங்கள், எவனும் தடுக்கமுடியாது
ஒரே நிபந்தனை என்னவென்றால், வரும்பொழுது காவேரியோடு வாருங்கள்..
No comments:
Post a Comment