தீபாவிற்கு தமிழகம் முழுக்க ஆதரவு, பல இடங்களில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலிசார் தவிப்பு
இக்கூட்டத்தில் அதிமுகவினர் மட்டும் பங்கெடுத்ததாக சொல்லமுடியாது, சசிகலா மீதான வெறுப்பால் எல்லா கட்சி தமிழர்களும் திரண்டிருக்கலாம் என்பதே உண்மை
என்ன இருந்தாலும் சசிகலாவினை எதிர்க்க தீபா பின்னால்தான் திரளவேண்டுமா? ஏன்?
பல விஷயங்கள் புரியாத தமிழகம் இது, அப்படியே இதனையும் புதிரில் வைத்துவிடலாம்
ஆனால் மிக பெரும் கூட்டம் கூடுகின்றது, தீபா பேரவைகள் யாரும் கட்டளை இடாமலே உருவாகின்றன, தன்னிச்சையாக உருவாகி வருகின்றன, ஆதரவளிக்கின்றன
பொதுவாக நாட்டை, மொழியினை, நதியினை , கடவுளை கூட பெண்ணாக்கி பார்க்கும் தமிழகம் ஜெயலலிதாவிற்கும் அந்த இடத்தினை கொடுத்திருக்கின்றது
அவரின் சாவில் ஏற்பட்ட மர்மமும், இன்னும் பெரும் சர்ச்சைகளும் மக்களின் கோபத்தை கடுமையாக கிளறியிருகின்றன
பெரும் கூட்டமாக கூடியிருக்கும் கொந்தளிப்பு தீபாவிற்கான ஆதரவு என்பதை விட சசிகலாவிற்கான எதிர்ப்பு எனும் வகையிலே பார்க்கபடுகின்றது,
இது கிட்டதட்ட 1972ல் எம்ஜிஆருக்கு இருந்ததை போன்ற நிலை
ஆக 45 வருடமாக தமிழன் திருந்தவே இல்லை..
நிச்சயம் இனி சசிகலா கும்பல் நிம்மதியாக தூங்கபோவதில்லை
ஒன்று புரிகின்றது
ஈராக்கின் அதிபர் யார் என்பதை அமெரிக்கா நிர்ணயிக்கும், அதிமுகவின் தலைவர் யார் என்பதை டெல்லிதான் நிர்ணயிக்கும்
அந்த காட்சிகள்தான் நடந்துகொண்டிருக்கின்றது
எம்ஜிஆர் காலத்திலிருந்தே அக்கட்சி அப்படி ஒரு அடிமை கட்சிதான்.
தீபா, சசிகலா என ஆளாளுக்கு மோதிகொண்டிருக்க , எம்ஜிஆருக்கு கிட்ணி தானம் செய்த அவரின் அண்ணன் மகள் லீலாவதி பாஜகவில் சேர்ந்திருக்கின்றார்
ஜெயா காலத்திலும் இவர் இருந்த இடம் தெரியவில்லை
ஆக எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதாவும், ஜெயா விசுவாசிகளை சசிகலாவும் ஓட விரட்டி இருக்கின்றார்கள்
ஆக அதிமுகவினரே சசிகலாவிற்கும் விசுவாசமாக இருந்தீர்கள் என்றால் உங்களையும் விரட்ட இன்னொருவர் பின்னால் வரலாம், கவனமாக இருங்கள்
No comments:
Post a Comment