Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நயன்தாரா முழக்கம்





Image may contain: 1 person, close-up

நாடெங்கும் 'ஜல்லிக்கட்டு' முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் ‍, ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நயன் தாரா முழக்கம்


திரிஷா மீது ஏதும் கோபம் இருக்கலாம் அல்லது முந்திகொள்வோம் எனும் விழிப்பு இருக்கலாம்


எவ்வாறு இருந்தாலும் நயனுக்கு வாழ்த்துகள்





முழங்கியதோடு நிற்காமல் அம்மணி பெசண்ட் நகர் பீச் பக்கமோ அல்லது மதுரை பக்கமோ போராட வந்தால் எப்படி இருக்கும்? அவர் நகைகடை திறந்தாலோ கடல் போல கூடினார்கள், போராட கூடினால் கேட்கவா வேண்டும்?

"போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்து, போராட்டம் வெல்லட்டும்.." என அவர் வாழ்த்தியதில் ஆயிரம் பூஸ்ட் குடித்த உற்சாகத்தில் இளைஞர் படை ஆர்ப்பரிக்கின்றது,

இப்படி ஒரு உற்சாகத்தை நயனை தவிர யார் கொடுக்க முடியும்?

எனினும் நயனின் இந்த நல்ல காரியத்தை சிம்பு முன்னால் வந்து எனக்கும் அந்த வாழ்த்தில் பங்கு உண்டு, நயன் வாழ்த்தியது என்னையும் சேர்த்து என கெடுக்காமல் இருக்கட்டும்

இதில் முன்னோடி யாரென கேட்டால் கண்களை மூடி சொல்லலாம் நமது குஷ்பூ

ஒருவேளை குஷ்பூ இடத்தை பிடிக்கும் திட்டம் நயனுக்கு இருக்குமோ?

முடியாது, ஆயிரம் நயன் வந்தாலும் முடியாத காரியம் அது.

ஒரே குஷ்பூ தான்

எப்படியோ நயனும் களத்திற்கு வருகின்றார் கரம் கூப்பி வரவேற்போம், கொஞ்சமாவது நன்றி உணர்வு அப்பெண்ணின் அடிமனதில் இருந்திருக்கின்றது

தன்னை(யும்) ரசித்து , வரவேற்று உயரவைத்து அப்படியே உயரத்தில் பிடித்தும்கொண்ட தமிழர்களுக்கு அவர் ஆதரவாக ஏதாவது சொல்ல நினைப்பதே பெரும் காரியம்

வாழ்த்துக்கள் நயன் தாரா, முடிந்தால் களத்திற்கு ஒருமுறை வாருங்கள்

இப்பொழுது எந்த நாம் தமிழர் கட்சிக்காரனவாவது இவள் தமிழச்சி அல்ல, இவள் வாழ்த்து வேண்டாம் என சொல்வானா? சொல்லவே மாட்டான்..












No comments:

Post a Comment