Thursday, January 12, 2017

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்:ஜெயா , அவர் சொத்தும் மக்களுக்கே

https://youtu.be/lGAfeO_ANuY

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என முழங்கிய ஜெயாவின் சொத்துக்களை தமிழக மக்களுக்கே கொடுப்பதுதான் நியாயம்


அம்மா என்று அழைத்த தமிழ்மகனே அந்த சொத்துக்களுக்கு எல்லாம் உரிமையுடையவன்


இப்படியான கோரிக்கைகள் இப்பொழுது தமிழகத்தில் வலுபெறுகின்றன‌




கொடநாட்டு பங்களாவின் ஒரு அறையினையாவது பிடித்துகொள்ளவேண்டும் என பல தமிழர்கள் கனவில் இருக்கின்றார்களாம்


அம்மா , அம்மா என அழைத்த தமிழனுக்கு அவர் சொத்து வந்தால்தான் அந்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பது அவர் பிள்ளைகளின் எண்ணம்


நாம்தான் அம்மாவின் பிள்ளைகள் என முன்பே சி.ஆர் சரஸ்வதி சொல்லியிருப்பதையும் அடிக்கடி தமிழர்கள் நினைவு கூறுகின்றார்கள்


அதனால் ஜெயா சொத்துக்களை தமிழருக்கே ...


அதானே, அம்மாவிற்கு மன்னார்குடி குடும்பம் மட்டும்தான் வோட்டு போட்டிருக்கின்றதா?


ஆக அம்மா சொத்து சசிகலாவிற்கும் அல்ல தீபாவிற்கும் அல்ல எல்லாம் தமிழகத்திற்கே..


வள்ளுவனின் உயரிய சொத்தும், கம்பனின் சொத்தும், பாரதியின் சொத்துமே தமிழக உடமையாகும்பொழுது,


எத்தனையோ தமிழக மாமன்னர்களின் மாளிகை தமிழக அரசுடமையாகும் பொழுது


அம்மா சொத்து தமிழக உடமை ஆக கூடாதா?


அரசர்கள் கட்டிய கோட்டை, மாளிகை முதல் வெள்ளையன் கட்டிய கோட்டை, ரிப்பன் பில்டிங் வரை அரசுடமையாகும் பொழுது


அம்மா கட்டிய போயஸ் வீடும், கொடநாடு மாளிகையும் இன்ன பிற கொத்தளங்களும் எப்படி தனியார் சொத்து ஆகும்


அரசர், வெள்ளையர், வரிசையில் அரசவாழ்க்கை வாழ்ந்த ஜெயா சொத்துக்களை தமிழக உடமை ஆக்குவதே அந்த பெரும் அரசர்கள் வரிசையில் ஜெயலலிதாவினை அமரவைக்கும் உன்னத செயல்


ராணி மங்கம்மாளுக்கு பின் தமிழகத்தை செழிப்புற ஆண்ட ஜெயாவிற்கொரு மாளிகை வேண்டாமா? மங்கம்மாள் போல ஜெயாவின் பெயர் வரலாற்றில் நிறக் ஒரு மாளிகை வேண்டாமா?


நாயக்கர் மஹால், செஞ்சி அரண்மனை, தஞ்சாவூர் அரண்மனை வரிசையில் கொடநாடும், சிறுதாவூரும் இடம்பெறட்டும்.


அவரின் மற்ற நிறுவணங்களின் பங்கு அவர் மிகவும் நேசித்த தமிழ்க விவசாயிகளின் நிவாரணம் ஆகட்டும்.


அம்மா மக்களுக்காக தவ வாழ்வு வாழ்ந்தார், தன் சொத்துக்களை எல்லாம் தமிழருக்கே கொடுத்தார் எனும் செய்தி வரலாற்றில் நிற்கட்டும்...


அம்மா இப்படி உண்மையிலே மக்களுக்காக வாழ்ந்தார், மக்களுக்கே கொடுத்தார் என்பதை நிரூபிக்கவேண்டிய அவசியம் அக்கட்சிக்காரனுக்கு இருக்கின்றது..


வாழ்க அம்மா நாமம்..



No comments:

Post a Comment