Sunday, January 22, 2017

சும்மாவே கலையாத கூட்டம் அது...




பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கும் மெரீனா போராட்டகளத்தில் காவல்துறை புகுந்தாகிவிட்டது


அரசு தன் இரும்புகரத்தினை காட்ட ஆரம்பித்தாயிற்று. காவல்துறைக்கு எதிரான பெரும் கோஷம் கிளம்புகின்றது


இது எளிதில் தீராது,





காரணம் திரண்ட கூட்டம் ஜல்லிகட்டிற்காக மட்டும் திரண்டது அல்ல. அது பல காரணங்களால் சேர்ந்த கூட்டம், ஜல்லிகட்டு ஒரு புள்ளி அவ்வளவுதான்

உரிய அவசாகம் கொடுக்காமல் இந்த கூட்டத்தை வலுகட்டாயமாக கலைக்க நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையானதாகவே அரசுக்கு இருக்கும்

அலங்காநல்லூருக்கு சென்னை பொங்கியபொழுது, இனி சென்னைக்காக மற்ற பகுதிகள் பொங்காதா?

மொத்த தமிழகத்தையும் கட்டுபடுத்தும் சக்தி யாருக்கு உண்டு?

பெரும் குழப்பத்தினை நோக்கி செல்ல தொடங்கியாயிற்று,

தேன் கூட்டில் கைவைக்கின்றது அரசு ..எதனை செய்ய கூடாதோ அதனை செய்கின்றது,

மாணவர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல..

பன்னீர்செல்வத்திற்கு பெரும் சிக்கல் ஆரம்பமாகும் நேரம்....

மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுவிட்ட போராட்டத்தை இனி இப்படி அணுகுவது மாநிலத்திற்கு அமைதி கொடுக்காது.

மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் எனும் தீவிரத்தில் இறங்குகின்றனர், அக்கடலும் அந்த அலைகளும் மிக ஆபத்தானவை என்பதில்தான் அடிமனம் கலங்குகின்றது

ஏதும் வீபரீதம் நிகழுமுன் காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் வாய் திறப்பது நல்லது.





நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.


சும்மாவே கலையாத கூட்டம் அது,


நயன் அடிக்கடி வர வாய்பிருக்கின்றது என் தெரிந்தபின் எப்படி கலையும்






 அது என்னவோ தெரியவில்லை, எந்த போராட்டம் என்றாலும் தமிழகத்தில் வரும் கோஷம் "முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்பது


அதுவும் கலைஞர் என்றால் அவர் பதவி விட்டு விலகி உடனே தற்கொலை செய்யவேண்டும் எனும் அளவிற்கு நிலமை கொந்தளிக்கும் , வைகோ போன்ற அல்லக்கைகள் எல்லாம் கரகாட்ம் ஆடும்,


சில வவ்வால் போல தலைகீழாக தொங்கும், நள்ளிரவு ஆந்தையாக, ஆற்றோரம் கழுதையாக அப்படி கத்திகொண்டே இருப்பார்கள்





ஆனால் அதிமுக அரசு என்றால் மட்டும் ஒரு பயலும் "தார்மீக பொறுப்பு" "ராஜினாமா" என சொல்லவே மாட்டான்.

இந்த களபேரத்தில் எங்காவது அப்படி ஒரு குரல் ஒலிக்குமா? ஒலிக்காது

இதே கலைஞர் அரசு என்றால் இந்நேரம் அவர் செத்தே தீரவேண்டும் என சொல்லி கொண்டிருப்பார்கள்









நாமெல்லாம் ஜல்லிகட்டு வேண்டும் என போராட, உலகமோ அந்த அமெரிக்க ஜல்லிகட்டு காளை வேண்டாம் என போராடுகின்றது

அதாகபட்டது டிரம்பிற்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.






No comments:

Post a Comment