ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின்னால் இருப்பது நடராஜன் என சொல்லிகொண்டே இருக்கின்றான் சிலபேர்
பொதுவாக மறைந்திருந்து செய்திகளை பரப்புவது நடராஜன் ஸ்டைல், இப்போராட்டம் வெற்றிபெறும் நிலையில் அவரே இப்படி கிளப்பிவிட வாய்ப்புகள் அதிகம்
அவர் இப்படி ஜல்லிகட்டினை பெரும் போராட்டமாக்கும் முட்டாள் அல்ல
பன்னீர்செல்வத்தை பதவி விலக வைக்க இப்படி எல்லாம் ஆடமுடியாது, அதற்கு கட்சிக்குள்தான் கலகம் வரவேண்டும்
இது சீரியசான பிரச்சினை, கொஞ்சம் அசந்தாலும் அரசே பறிபோகும் நிலை, பின்னர் சசிகலா வந்து நான் நன்றாக ஆளுவேன் என சொன்னால் எல்லாம் நடக்காது,
அது தேர்தலில்தான் முடியும்
இன்றைய சூழலில் பன்னீர்செல்வத்தின் வோட்டு கூட சசிகலாவிற்கு கிடைக்குமா என்பது சந்தேகம்
ஆக இந்த ரிஸ்க் எடுக்க நடராஜன் விரும்பமாட்டார், அரசியல் அப்படியானது
ஆனால் போராட்டம் வென்றுவிட்டால் அதன் பெருமை யாருக்கு? என்பதில் மிக சுயநலமாக கிளப்பிவிடபடும் வதந்தி இது.
கூடவே அப்பாடியா? அவர்தான் காரணமா? அப்படியானால் போராடவேண்டாம் என கூட்டம் கலையும் தந்திரமும் இருக்கின்றது, உளவுதுறை விளையாட்டு அப்படியானது
ஆக நடராஜன் பெயரினை இப்பிரச்சினையிலிருந்து விலக்கி வைப்பது நல்லது.
No comments:
Post a Comment