தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.
வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக அது திகழ்ந்தது
ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான்,
அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது, ஆம் யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக மட்டும்...
கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.
ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.
அதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.
19866ல் இருந்து 1995 வரை யாழ்பாணத்தை கையில் வைத்திருந்த புலிகள் இந்த நூலகத்திற்கு செய்ததென்ன என்றால் ஒன்றுமே இல்லை, புலிகள் அப்படித்தான்.
1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது, சீரமைக்கும் ஆசை எல்லாம் புலிகளுக்கு இல்லை..
புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்
புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.
இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.
உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை,
நூலகத்தையே எரிக்கும் காட்டுமிராண்டி தேசம் என சிங்களனை தனிமை படுத்தித்தான் இந்தியா ஈழத்தில் நுழைய முடிந்தது
இந்தியா ஈழ மக்களுக்காக களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.
ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று
அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல
வரலாற்றில் நிகழ்ந்த பெரும் அழிவுகள், கொலைகள், படுகொலைகள், தீரா மன உளைச்சல் தரும் கொடூரங்களில் இந்த அறிவு செல்வமான யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவமும் ஒன்று
காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.
அறிவார்த்த தமிழக தமிழர்கள் ஈழ தமிழருக்காக அழவேண்டிய காரியங்களில் முதல் சொட்டு கண்ணீர் நிச்சயம் இந்த நூலகத்திற்காகத்தான் இருக்க வேண்டும்
ஈழ தமிழனின் பெருமை அந்த பிரபாகரன் அல்ல, அவரொரு சைத்தான், மாறாக அழிந்துவிட்ட அந்த நூல்களும் அந்த நூலகமுமே..
அதனை எல்லாம் இங்கு எந்த உணர்வாளனும் பேசமாட்டான், அந்த நூலகத்திற்கு ஆயிரம் புத்தகம் வாங்கிகொடுத்து இன்னும் பொலிவுற செய்வோம் என்றேல்லாம் யாருக்கும் சிந்தனை வராது.
பில்லியன் டாலர் சொத்துமதிப்புள்ள புலிகளுக்கே அந்த எண்ணம் இல்லை, ஐரோப்பிய வாழ் ஈழதமிழனுக்கும் இல்லை, இருந்திருந்தால் தமிழகத்தில் ஏன் சில்லறைகள் உருவாக போகின்றன?, யாழ்பாண நூலகம் இன்னும் சிறந்திருக்கும்
அவர்களுக்கு வரும் சிந்தனை எல்லாம் பிரபாகரன், முள்ளிவாய்க்கால், கலைஞர், இந்தியா என எல்லாமே அரசியல், அந்த நாசகார சிந்தனை
படிப்பிற்கும் அறிவிற்கும் பெரும் பெயர் பெற்றிருந்த யாழ்பாணம், இந்த நூலக எரிப்பிற்கு பின் நாசமாயிற்று, இன்று அதன் நிலை மகா பின்னடைவு
யாழ்பாணா பொற்காலங்களில் அந்த நூலகம் செயலாற்றிய காலம் முக்கியமானது, இனியாவது அந்த நூலகமும் யாழ்பாணமும் தன் பழம் பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்
இந்த நூலக எரிப்பு தினத்திற்காக யார் நினைவு கூர்ந்து அழுகின்றார்களோ இல்லையோ, அந்த அரிய புத்தகங்களுக்காக நாம் அழலாம்
புத்தகங்களின் அருமை தெரிந்த யாரும் அழலாம்...
No comments:
Post a Comment