Friday, May 26, 2017

அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது





அறியாமை, நோய், வறுமை,ஆயுத குவிப்பு, தீவிரவாதம் என பல விஷயங்களில் இந்நாடு விடுதலை அடைய வேண்டி இருக்கின்றது,


ஆனால் இந்த அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது, இனி அவைகள் இஷ்டம் போல திரியலாமாம், பால் மட்டும் கறந்துவிட்டு மக்கள் சத்தம் போடாமல் இருந்துவிடவேண்டுமாம்


அவற்றை கட்டுதல், வர்ணம் பூசுதல் இன்னபிற தொந்தரவுகள் எல்லாம் செய்ய கூடாதாம், வயதான மாடுகளுக்காக நாடெல்லாம் முதிர்ந்த மாட்டு இல்லம் அமைக்கபட்டு, அங்கே மாடுகள் பாதுகாக்கபட்டு பின் அடக்கம் செய்யபடுமாம்.





இது மாட்டுகறி சர்ச்சையினை மறுபடி சீண்டுவதாகும், மாட்டுகறி இல்லையெனில் அது சிக்கலாகு, மக்கள் முதல் மிருககாட்சி சாலை புலி வரை பாதிக்கபடும்

பெரும் உணவு சந்தையினையே இது முடக்கும்,

இன்றோடு இந்த அரசு 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என சொல்லிகொள்கின்றார்கள்

3 ஆண்டு சாதனை எது என கேட்டால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை, சொல்வதற்கு இல்லை

எதனை எல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதில் ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, கருப்பு பணம் ஒரு பைசா வெளிநாட்டிலிருந்து வரவில்லை,

அசுர பலமிருந்தும் ஒரு தைரியமான திட்டம் என எதுவுமில்ல்லை

ஒரே ஒரு ஆறுதல் இந்த பலம் இருந்தும் அவர்கள் ராமர் கோவில், கிருஷ்ணன் கோவில் என கட்டி கலவரம் செய்யாமல் இருந்தது, அது ஒன்றுதான் ஆறுதல்

இந்தியாவில் எப்படியோ தமிழகத்தில் சில விஷயங்கள் நடந்தன, பிண்ணனியில் அவர்கள் இருந்தால் அதுவும் ஆறுதல்

மற்றபடி மக்கள் எதிர்பார்த்து ஆட்சியினை கொடுத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒன்றும் நடக்கவில்லை

இன்னும் 2 வருடங்கள், அதன் பின் மாடுகளா வாக்களிக்க போகின்றது?




 

 



 

No comments:

Post a Comment