Tuesday, May 30, 2017

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்


கலைஞருக்கு நியாபக மறதி ஏற்பட்டது என செய்தி வந்தது, திமுக அதனை மறுத்தது, உடல்நலம் சரியில்லை என்றது, அப்படியே விட்டிருக்கலாம்


கலைஞர் தன் சுண்டுவிரலை அசைக்க முடிந்தாலும் எழுதும் ரகம், அவரது எழுத்து வரவில்லை என்றால் சகாப்தம் முடிந்தது விஷயம் என்பதுதான் அர்த்தம், இது எல்லோருக்கும் புரியும்




ஆனால் அப்படி அல்ல என மறுத்துவிட்டு, விழா எடுத்து, பின் கலைஞருக்கு அழைப்பு எல்லாம் கொடுத்து அழிச்சாட்டியம் செய்தார்கள்


இப்பொழுது நேற்றுதான் கலைஞர் பேசினார் என்கின்றார்கள், அதாவது சுய‌ நினைவு இருக்கின்றதா என மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு கலைஞர் 3 பதில் சொன்னாராம் , உடனே அண்ணாவிற்கு அடுத்து கலைஞர் நேசிப்பது துரைமுருகன் என ஒரே அழுகை


கலைஞருக்கு நினைவு தப்பி இருந்தது இப்பொழுது பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அவர் இன்னும் குணமாகவில்லை என்பதும் புரிகின்றது


இப்படிபட்ட செய்திகளை எல்லாம் திமுக ஏன் அனுமதிக்கின்றது? அந்த மனிதனின் உடல்நலம் சரியில்லை என சொல்லிவிட்டு நகர்ந்தால்தான் என்ன?


ஏன் இப்படி நாடகம் ஆடவேண்டும்?


திமுக எப்பொழுதுமே திறந்த புத்தகம், அண்ணா நோயுற்ற காலமுதல் அது எதையுமே மறைத்ததில்லை, கலைஞர் அப்படித்தான் கட்சியினை கொண்டு சென்றார்


உறுதியாக சொல்லலாம், ஸ்டாலின் செய்வது ஜெயலலிதா பாணி அரசியல், இது எப்படி பலனளிக்கும் என்பதை காலம் சொல்லும்


அருகில் இருந்த துரைமுருகனை கலைஞர் அடையாள கண்டுகொண்டாராம், அது ஒரு செய்தியாம், ஏன் கலைஞருக்கு துரைமுருகனை முன்பு தெரியவே தெரியாதா?


ஏன்? தமிழிசை போட்டோவை காட்டியிருந்தால் கூடத்தான் இது தமிழிசை என சொல்லியிருக்க மாட்டாரா?


அதற்காக அவர் எப்பொழுதும் பாஜக நினைவாக இருக்கின்றார் என சொல்ல முடியுமா?


திமுகவினை இனி அவர்கள் நம்பாத கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..



No comments:

Post a Comment