Wednesday, May 24, 2017

ஏழு அரசியல் காமெடி துணுக்ஸ்....





அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படுவதால், வைகோ சொந்த ஜாமீனிலேயே போகலாம்..


ஒரு தேச துரோக இந்திய சட்டத்தை மதிக்காத இவரின் வழக்கறிஞர் பட்டத்தை பறித்திருக்க வேண்டும், ஆனால் இப்படி தலையினை தட்டி சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் என்றால், என்ன அர்த்தம்??


ஏதோ சிரிப்பு வக்கீல் என்று அர்த்தம்..





கோவாலு.. உன்னையும் நம்பி ஒருத்தன் ஒரு பெரும் கொலையும் செய்து, விடுதலை போராட்டம் நடத்தினான் பாரு, அவன் எப்படி உருப்படுவான்? அப்படித்தான் சாவான்









தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது: சீமான் காட்டம்







என்னய்யா நீ? என்ன பிரச்சினை உமக்கு? தமிழன் முதல்வராக வேண்டும் என்கின்றீர், அப்படி ஒரு தமிழன் வந்தால் ஆட்சி அடமானம் என்கின்றீர்

அடிக்கடி இனமானம் இனமானம் என கத்துவீர் அல்லவா? எங்கே படைதிரட்டி இந்த அடமானத்தை மீட்டுவிடும் பார்க்கலாம்


கச்சதீவினை மீட்க 50 ஆயிரம் பேரை அனுப்புவேன் என்றவர்தானே? 5 ஆயிரம் பேரை அனுப்பி இந்த அடமானத்தை மீட்டுவிட வேண்டியதானே சைமன்..























ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சிறைபறவை சின்னமாவினையும், திகார் தினகரனையும், மக்கள் ஏற்றுகொள்வார்களாம்,

ஆனால் ரஜினியினை ஏற்றுகொள்ள மாட்டார்களாம்,


ஒருவேளை ஊழல் குற்றசாட்டு, மோசடி குற்றசாட்டு, கொலை வழக்கு, சிறைவாசம் இப்படி எந்த தகுதியும் இல்லாத ரஜினியினை மக்கள் எப்படி ஏற்பார்கள் என்ற அர்த்ததில் சொல்லியிருப்பாரோ?

மிஸ்டர் செல்லூர் ராஜூ, ரஜினி மேடையில் இருந்த பாபா முத்திரை தெர்மாகோலில் செய்ததுதானே?














அண்ணாவுக்கு பிறகு கலைஞரை எம்.ஜி.ஆர் முதல்வராக்கினார் நெடுஞ்செழியன் வந்துருந்தா நல்லா இருக்கும்:- சீமான்

அந்த செபாஸ்டியனும் அன்னம்மாளும் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் , குழந்தை பெற்றுகொள்ளமால் இருந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்





 



தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

எதில் புயல் வேகம்? மோடியினை ஓடி ஓடி சந்திப்பதிலா?

அல்லது பெங்களூருக்கும் திகாருக்கும் மாற்றி மாற்றி ஆளனுப்பவதிலா?





 



தமிழரை சிந்திக்க வைகின்றார், தமிழத்தின் சாக்ரடீஸ் சீமான் : மங்கி குரூப்ஸ்

அந்த கிறுக்குதனத்தின் பெயர் சிந்தனையா? இருக்கட்டும்

சரி, விஷம் கொடுத்து நீங்களே கொல்கின்றீர்களா? இல்லை நாங்கள் கொடுக்கட்டுமா?










சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன் : எடப்பாடி பழனிசாமி

அப்படியே ஜெயா தீர்ப்பு எழுதிய அந்த உச்ச நீதிமன்ற நீதிபதியினையும் படதிறப்புக்கு அழைத்தால் என்ன?





 













 

No comments:

Post a Comment