எங்கோ இமயமலையில் இருந்து இங்கு வந்த முருகன் தமிழ் முப்பாட்டனாம்
இமயத்து அகத்தியர் தமிழ் கொடுத்த தமிழனாம்
ஆனால் இங்கே வாழும் ரஜினி தமிழன் இல்லையாம், தமிழன் ஆகவே முடியாதாம்
ஏதாவது புரிகின்றதா? இதுதான் சீமானிசம்..
புரியவில்லையா? இன்னும் விளக்கமாக சொல்லலாம்
ஈழதமிழனுக்கும் தமிழக தமிழனுக்கும் என்ன உறவு? இருவரும் தமிழ் பேசுவதால் தொப்புள்கொடி உறவு
இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும், ஈழபுலிகளுக்கும் என்ன பகை? இருவரும் தமிழ்தானே பேசுகின்றார்கள்? இல்லை தமிழ் முஸ்லீம்கள் தமிழ் பேசலாம் ஆனால் தமிழர் என ஏற்க முடியாது அவர்கள் வேறினம்
ஈழதமிழருக்கும், தமிழக வம்சாவளி மலையக தமிழருக்கும் பெரும் இடைவெளி ஏன்? திருமண தொடர்பு கூட இல்லையே? அது..இது ..ஹிஹிஹிஹிஹ்
புரிகின்றதா? இதுதான் சீமானிசம்
இதற்கு மேலும் புரிய வைக்கமுடியாது, நீங்கள் புரிந்தமட்டும் புரிந்துகொள்ளுங்கள்..
No comments:
Post a Comment