மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது
இப்பொழுதெல்லாம் மிக சரியான விஷயங்கள் நடக்கின்றன, வைகோ உள்ளே போனது, இந்த பெரும் பொய்யனான திருமுருகனை உள்ளே போட்டது எல்லாம் வரவேற்க தக்க விஷயங்கள்
இப்படி நடக்கும் என்று அங்கிள் சைமனுக்கு முன்பே தெரிந்ததால் கன்னடன், ரஜினி, என் இனம், எளிய பிள்ளை என பாட்டை மாற்றிபாடி தந்திரமாக தப்பித்ததாக நினைத்து கொள்கின்றார்
இந்த களைகளை, பதர்களை விஷ வித்துக்களை பிடித்து உள்ளே போட்ட அரசினை பாராட்டுகின்றோம்
ஆக தமிழின உணர்வாளர்களே, நன்றாக கவனியுங்கள்
கலைஞர் அரசும், காங்கிரஸ் அரசும் உங்களை விட்டுத்தான் வைத்திருக்கின்றது , ஆனால் பச்சை தமிழன் பழனிச்சாமி அரசும், மோடி அரசும்தான் உங்களை உள்ளே தள்ளுகின்றன
அதாவது 2009ல் நீங்கள் எல்லாம்யாரை ஆதரித்தீர்களோ அவர்கள்தான் உங்களை இப்பொழுது பிடித்து நசுக்குகின்றார்கள்
இனியாவது திருந்துங்கள் , இல்லையென்றால் விளைவுகள் மோசமாயிருக்கும்
அது இருக்கட்டும்
இந்த சீமான் பிரபாகரன் எனும் அந்நிய தீவிரவாதி கொடி பிடிக்கின்றார், காஷ்மீரிய யாசின் மாலிக்கோடு எல்லாம் போஸ் கொடுத்தார், அவரை எப்பொழுது பிடிச்சி உள்ளே போட போறேள்...
திருமுருகனுக்கே இப்படி என்றால், சீமானை எப்படி விடலாம்?
அவரையும் கொஞ்ச நாள் வைகோ செல்லில் வைக்காமல் இது நீதியான நடைமுறை என யாரும் ஏற்கமாட்டார்கள்
முன்பு பல இடங்களில் சிறை என்னை செதுக்கும், நான் எண்ண படித்ததே கம்பி எண்ணத்தான் என முழங்கியவர் அங்கிள் சைமன்
ஆதலால் அவர் சிறைக்கு அஞ்சமாட்டார், பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் அவர் சிறைக்கு சென்று வரட்டும்,
அப்பொழுதுதான் தமிழக வந்தேறிகள், காங்கிரசார் எல்லாம் அவரை எப்படி விட்டு வைத்திருந்தார்கள் என்பது புரியும்..
No comments:
Post a Comment