Tuesday, May 23, 2017

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் : தமிழிசை

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் - தமிழிசை


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் திமுகவின் அரசியல் வாழ்வே தொடங்கிற்று


இந்துமதத்தின் மூடபழகங்களைத்தான் திமுக சாடியதே தவிர மொத்த நம்பிக்கையினையும் அல்ல‌




கடவுள் நம்பிக்கை இல்லா பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவில் தாழ்த்தபட்டோருக்காக போராடிய காலமும் உண்டு


கலைஞர் ஆட்சியில் என்றுமே ஆலயங்களுக்கான காரியங்களில் கட்டுபாடு விதிக்கபட்டதே இல்லை, திருவாரூர் தேருக்கும் கலைஞர் செய்தது கொஞ்சமல்ல‌


திருச்செந்தூர் வைரவேலுக்கு நீதிவேண்டி கலைஞர் நடந்தது கொஞ்சமல்ல, தஞ்சை கோவிலுக்கும் விழா நடத்த அவர் தயங்கியதில்லை


ஆலயவிஷயங்களில் திமுக என்றுமே பின் வாங்கியதில்லை, அதே நேரம் மூடபழக்கமான தீமிதித்தல், மண்சோறு, நாக்கு மூக்கு வெட்டுதல் போன்ற காரியங்களை திமுக கண்டிக்க தயங்கியதுமில்லை, அதனை எல்லாம் வளர்த்தது அதிமுக, அது அவர்கள் கட்சிபணி


ஆக திமுக மதங்களுக்கு விரோதி என சொல்பவர்கள் மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களாக மட்டுமே இருக்கமுடியும்..


தமிழக அரசின் ராஜகோபுர சின்னத்தை கழக அரசு மாற்ற முனைந்ததா? ஒருகாலமும் இல்லை


இந்த தமிழிசைக்கு ஒரு மண்ணும் புரியவில்லை, கொஞ்ச நாள் விடுமுறை எடுத்துவிட்டு அவர் தந்தையிடம் வரலாறு படிப்பது அவர் அரசியலுக்கு நல்லது


இல்லாவிட்டால் ஒருநாள் இவரை பிடித்து அவர் காதில் கதற கதற திமுகவினர் வரலாறு சொல்லிகொடுக்கும் காலம் வந்துவிடும்


தமிழிசை அதனை தவிர்ப்பது நல்லது


மேடம் தமிழிசை உங்கள் காதோரம் ஒரு ரகசியம் சொல்கின்றோம், யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்


"திமுக மசூதியினையோ, தேவாலயத்தையோ கோவிலையோ இடித்த கட்சி அல்லவே அல்ல.."



No comments:

Post a Comment