Wednesday, May 24, 2017

வீழ்ந்துவிடா வீரம், மண்டியிடா மானம்

சிங்கப்பூர் மலேசிய மக்களுக்கான மண், அங்கு குடியேறி வந்த சீன வம்சம் தான் லீ குவான் யூ


சிங்கப்பூரை சிங்கப்பூர் குடிமகன் தான் ஆளவேண்டும் என்றால் சிங்கப்பூர் இன்று இந்தோனேசியா போலத்தான் இருந்திருக்கும்


முன்பு சீமான் தூக்கிபிடித்த சே குவாரா அர்ஜெண்டினாகாரர், ஆனால் கொண்டாடபட்டது கியூபாவில்




ஏராளமான தீவுகளை கொண்ட கியூபாவின் ஒரு தீவினை சேர்ந்தவர்தான் காஸ்ட்ரோ


அமெரிக்காவினை அமெரிக்கன் ஆளவேண்டும் என்றால் அது இன்று செவ்விந்தியன் கையில்தான் இருக்கும், இவ்வளவு வளர்ந்திருக்காது


ஆனானபட்ட ஹிட்லரே ஆஸ்திரியாவில்தான் பிறந்தார், கலிபோர்னிய கவர்ணராக இருந்த ஆர்னால்ட் ஆஸ்திரிய‌ பிறப்பு, ஏன் எம்ஜிஆரே மலையக இலங்கையில்தான் பிறந்தார்


உலகம் முழுக்க ஏராள விஷயங்களை காட்ட முடியும்,


இன்று மராட்டியன் ரஜினி என எதிர்க்கும் சீமான், இனி மும்பையில் நான் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிப்பு என செல்ல முடியும்? அங்கு நாம் தமிழர் கட்சிக்கு ... வேலையா?


கோலாரில் நாம் தமிழர் கட்சிக்கு எதற்கு கிளை?


லண்டனிலும் நார்வேயிலும் ஈழதமிழர் தேர்தலில் வென்றால் இவர்கள் இங்கு வெற்றிமுரசு கொட்டுவது ஏன்?


ஈழதமிழன் ஐரோப்பிய நாடுகளில், கனடாவில் தேர்தலில் நிற்கலாம், மன்றம் செல்லலாம் ஆனால் ரஜினி தமிழக அரசியலுக்கு வர கூடாதா? என்ன நியாயம் இது?


யாரும் எங்கும் அரசியலுக்கு வரலாம், ஏற்றுகொள்வது மக்கள் விருப்பம், அவர்கள் பார்த்துகொள்ளட்டும்


எளிய தமிழ்பிள்ளைகளின், புரட்சி படை வீரமிக்க தமிழ்கூட்டம் ஒரு நடிகனை பார்த்தா அஞ்ச வேண்டும்"


"வா வந்து பார் மோதுவோம் .." என்பது சவாலா? அல்லது "நீ வரவே கூடாது நான் தனியாக விளையாடி வீரம் காட்டுவேன்.." என்பது சவாலா?


அது கோமாளித்தனம் அல்லவா? அதனைத்தான் சீமானும் பாரதிராஜாவும் செய்கின்றார்கள்


ஈழத்தில் பிரபாகரன் அதனைத்தான் செய்தான், தன்னை எதிர்த்த தமிழரை எல்லாம் கொன்றுவிட்டு தனியாக களத்தில் நின்று நான் மட்டும் தலைவர் என்றான்


இவர்களால் அப்படி செய்யமுடியவில்லை மாறாக நீ களத்திற்கு வர கூடாது, நாங்கள் மட்டும்தான் நிற்போம் என்கின்றார்கள், அஞ்சி உளறுகின்றார்கள்


இதன் பெயர் தான் "வீழ்ந்துவிடா வீரம், மண்டியிடா மானம்"


ஒன்றுமட்டும் இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்


இந்தியாவோடு இவர்களால் ஒட்டமுடியாது தமிழகம் தனியாக வெண்டுமென்றால், மறுநிமிடமே இவர்களோடு வாழமுடியாது தனி "பாண்டியநாடு" வேண்டும் என்ற குரல் உடனே ஒலிக்கும்


நாமும் தமிழர், நாம் பாண்டியர் என்ற கட்சிகள் எல்லாம் முளைக்கும்


அதனை நினைவில் வைத்துகொண்டு இந்த கும்பல் அமைதி காப்பது நல்லது



No comments:

Post a Comment