Tuesday, May 23, 2017

ஜாமீன் கோருகின்றார் வைகோ இன்னும் பிற







தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா


மனிதர் இன்னும் தன் கடைசிபட "அன்னகொடி" படு தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை போலிருக்கின்றது, ஏதோ மூளை கலக்கத்தில் இருக்கின்றார்


பின்ன இப்படியா பேசுவார்?





பன்னீரும், அவரை தொடர்ந்த பழனிச்சாமியும் தமிழர்கள் இல்லையா?

சீமானும் இதனையே சொல்கின்றார், அய்யா பன்னீர், பழனிச்சாமி தமிழர் இல்லையா என்றால் அவர்கள் நான் எதிர்பார்த்த தமிழர் இல்லை என சீறுகின்றார் சீமான்

நீர் எதிர்பார்த்த தமிழர் யாரென்றால், இன்னுமா தெரியவில்லை அது நானேதான் என ஒரு மாதிரி சிரிக்கின்றார் சீமான்

பாரதிராஜாவிற்கு இன்னும் தமிழன் முதல்வானதே தெரியவில்லையா அல்லது தனக்கு பிடித்தவர்கள் முதல்வர் ஆகவில்லையா என தெரியவில்லை

ஆனால் போகிற போக்கில் சசிகலாவும், தினகரனும், சீமானும்,நடராஜனும், திவாகரனும் மட்டும் தமிழர் என்ற முடிவுக்கு பாரதிராஜா வந்துவிடுவார் போலிருக்கின்றது

எப்படியோ, மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி நீங்கள் தமிழர் இல்லை என்றொரு கும்பல் இதோ கிளம்புகின்றது, கொஞ்சம் கவனமாக இருங்கள்








ஜாமீன் கோருகின்றார் வைகோ


வரட்டும், எல்லோருக்கும் போரடிக்கின்றது , மனிதர் வந்தால் காமெடி களை கட்டும்


வந்தவுடன் இனி என்ன சொல்வார் தெரியுமா?





"என்னை கலைஞரின் வைரவிழாவிற்கு வரகூடாது என சொல்லும் தகுதி யாருக்கு இருக்கின்றது? நான் போனால் யார் தடுக்க முடியும்...

நான் டாக்டர் கலைஞரின் அந்த விழாவிற்கு போகத்தான் போறேன்... என்ன செஞ்சுருவாங்க..வைகோவ பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்

அன்னைக்கு ஆயிரம் துப்பாக்கி நடுவிலே நடுகடலில் அஞ்சாமல் சென்றவன் நான், இதுக்கா பயப்படுவேன் ஹே ஹே இல்ல இல்ல"









நெற்றிக்கண் படத்தில் மேனகா கண்ணில் படுகின்றார், கீர்த்தி சுரேஷின் தாயார்

அவர் சிரித்தவுடன் கீர்த்தி சுரேஷ் நினைவுக்கு வருகின்றார், அவரை தொடர்ந்து Babu Rao கண்முன் வருகின்றார்

நூலை போல சேலை, தாயினை போல பிள்ளை அப்படியே தாயினை போல சிரிக்கின்றார் கீர்த்தி, தாய் ஓரடிக்கு சிரித்தால் மகள் 2 அடிக்கு சிரிக்க வேண்டாமா?


அதனைத்தான் செய்கின்றார்.

கீர்த்தி சுரேஷ் சிரித்து வாங்கும் அனைத்து கலாய்ப்புகளுக்கும் இந்த மேனகாதான் காரணம், அதனால் Babu Rao சமூகம் இனி அந்த பாவபட்ட கீர்த்தியினை கலாய்பதை விட்டு விட்டு இந்த மேனகாவினை கலாய்க்கலாம்

தாய் சிரித்த சிரிப்புக்கு அந்த பச்சபுள்ள என்ன செய்யும் பாவம்..





 

 


 

No comments:

Post a Comment