"கோயில், மாட்டுகறி, மதம், இட ஒதுக்கீடு , யோகா, சமஸ்கிருதம் மதவெறி, இரும்புகரம், சாமியார்கள், ஆசிரமம் இவை எல்லாம் இல்லாமல் எப்படி உங்கள் நாட்டில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள்??
நாங்கள் கோட்சேயினை கூட மறக்கவில்லை, ஆனால் நீங்கள் இனவெறியன் ஹிட்லரை மறந்துவிட்டீர்களாமே? எப்படி??
ஆச்சரியமாக இருக்கின்றது? அவனை மறந்துவிட்டு என்ன அரசியல்???
எங்கள் நாட்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை, அப்படிபட்ட விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால் நான் பிரதராக முடியுமா? இல்லை உங்களை எல்லாம் வந்து பார்க்கத்தான் முடியுமா? என்னமோ போங்கள்.
கிழக்கு ஜெர்மனியினை ஏன் மேற்கு ஜெர்மனோடு இணைத்தீர்கள்? இணைக்காமல் இருந்தால் தானே அவர்களை எதிரியாக்கி அரசியல் செய்யலாம், சரி இணைந்த பின்னும் அவர்களை இரண்டாம் குடிமக்கள் என அரசியல் செய்யவில்லையா?
சரி, புகழ்மிக்க ஜெர்மானிய தொழிற்சாலையினை நான் ஏன் பார்க்க வேண்டும்?
என்னை ஒரு மாட்டுபண்ணைக்கு அழைத்து செல்ல சொன்னேன், அதனை விட்டுவிட்டு இங்கு சந்திப்பு என அழைத்து வந்துவிட்டீர்களே.,, என்ன நியாயம்???.."
No comments:
Post a Comment