Wednesday, May 24, 2017

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது, ரஜினி ரசிகர்கள் இருப்பின் கவனத்தில் கொள்ளலாம்,


எப்பொழுதோ எழுதியது எப்பொழுதும் இந்த கும்பலின் அழிச்சாட்டியத்திற்கு பொருந்துகின்றது, அவர்கள் அப்படித்தான்


அதாகபட்டது, இது தமிழ்நாடு தமிழன் முதல்வராகவேண்டும், மற்ற இனம் எல்லாம் வாழட்டும் தமிழன் ஆளட்டும் என்பது சீமானின் தற்போதைய கொள்கை, இதற்கு சில சீடர்கள் சரி


ஆனால் சிங்களனும் இலங்கையில் அதனைத்தான் சொன்னான், இது சிங்கள பூமி, மலையக தமிழன்,ஈழ தமிழன், மூர்ஸ் எனப்படும் இஸ்லாமிய தமிழன் என எல்லோரும் வாழட்டும் நாங்கள் தான் ஆள்வோம், இது சிங்களர் கொள்கை,


அனாரிக தர்மபாலா அதனைத்தான் சொன்னான், ஜெயவர்த்தனே ராஜ்விடம் இதனைத்தான் சொன்னான். ராஜபக்சே நார்வே தூதரிடம் சொன்னான் இதோ மைத்ரிபாலா சொல்கிறார், "புலிகள் இல்லை என்பதற்காக எல்லா தமிழகர்களையும் அழித்தா விட்டோம்?, இல்லை அவர்களும் வாழட்டும்"


இவர்களுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு வாதத்திற்கு வைத்தாலும் கூட‌ ராவணனை ராமன் அடியோடு அழித்தானா? அல்ல விபீஷ்ணனை அரசனாக்கித்தான் வைத்தான், அப்படியானால் இப்போது வாழ்வெதெல்லாம் கோழையான, ஈன, காலில் விழுந்த‌துரோகி வம்சமா?


பிரபாகரனும் பொட்டுவும் துரோகி,கோழையான, ஈன, காலில் விழுந்த‌ வம்சமா? அதனையா கொண்டாடுகின்றீர்கள் சீ..சீ


சிங்களன் வந்தேறி என்றால் இன்று 80% அவன் இனம், 13% ஈழதமிழன், 5% மலையக தமிழன், 2% அனாதை தமிழ் இஸ்லாம், இதில் எப்படி 13% மக்களுக்கு தனிநாடு கொடுப்பார்கள்? ஒட்டுமொத்த ஐரோப்பிய ஈழத்தவரும் இலங்கையில் குடியேறி மக்கள் தொகையினை உயர்த்தி காட்டலாம் அல்லவா? செய்வார்களா? செய்வார்களா? ஐரோப்பிய குடியுரிமை துறப்பார்களா?


இலங்கையில் இருப்பவர்களில் மலையகத்திற்கும் ஈழத்தவருக்கும் ஆகாது, ஈழத்தவருக்கும் இஸ்லாமிய தமிழகருக்கும் ஆகாது, இன்னும் ஏராளம்.


சரி அவன் வந்தேறி சிங்ளனாக இருந்து தொலையட்டும்,


அப்படியானால் நாம் தமிழர் கொண்டாடும் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ யார்? சிங்கப்பூரின் வந்தேறி அல்லவா? மலேசியன் அல்லவா சிஙகப்பூரினை ஆண்டு சொர்க்கமாக்கி இருக்கவேண்டும், வந்தேறி லீ வினை நீங்கள் புகழ்வதேன்.


உங்கள் வழிகாட்டி ஹிட்லர் என்ன ஜெர்மனியில் பிறந்தவனா? ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த வந்தேறி அல்லவா?


அமெரிக்கர்கள் என்ற வந்தேறியிடம் இவர்கள் போர்குற்ற விசாரணைக்கு முறையிடுவதேன்? ஒரு மண்ணின் மைந்தனான மிசவுரி ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும் செவ்விந்தியனிடமல்லவா முறையிடவேண்டும், போர் குற்ற விசாரணைக்கு ஐநா அதிகாரியாக வந்த நவநீதம் பிள்ளை யார்? தென்னாப்பிரிக்காவின் வந்தேறி அல்லவா?


நீங்கள் நாங்கள் ஆளட்டும் மற்றவன் வாழட்டுமென்ற சிங்களனின் தத்துவத்தை பின்பற்றுகின்றீர்கள், ஆனால் பிரபாகரனை ஆதரிக்கின்றீர்கள்.


அப்படியே இங்குள்ள தெலுங்கு மக்களை வந்தேறி என்கின்றீர்கள் ஆனால் உலகெல்லாம் உள்ள வந்தேறி தலைவர்களை வழிபடுகின்றீர்கள்.


ரஜினியினை அனுமதிக்க முடியாது என்கின்றீர்கள், ஆனால் சிங்கப்பூர் லீ குவான் யூவினை கொண்டாடுகின்றீர்கள்.


தமிழகம் தமிழருக்கு என்கின்றீர்கள், ஆனால் மும்பையில் நாம் தமிழர் கட்சி நடத்துகின்றீர்கள்..


இதற்கு மேலும் கேட்டால் கலைஞர்,ஜெயலலிதா மாற்று சீமான் தான் என்பீர்கள். இப்பொழுது ரஜினி வந்தாலும் அலறுகின்றீர்கள்


அப்படி அண்ணனுக்கு முதல்வராக் ஆசை என்பதை நேரடியாக சொல்லலாம் அல்லவா? இதற்கு ஏன் ஆயிரம் வந்தேறி, இன துவேஷம், ஆயிரம் கத்தல்கள்?


ரஜினி சென்னைக்கு வந்தேறி என்றால், பாரதி ராஜாவும் சீமானும் சென்னைக்கு யார்? பூர்வகுடி மக்களா? வந்தேறிகள் தான். ரஜினி வந்தேறி என்றால் நீங்களும் வந்தேறியே..


எல்லா மக்களையும் அரவணைத்து ஒரு மாற்றம் கொடுக்கமுடியாதா? தமிழன், தெலுங்கன், கன்னடன் என பேசி வன்மம் வளர்த்துதான் செய்வீர்களா? இது நல்ல பலனை கொடுக்கும் என நினைக்கின்றீர்கள்?


ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்து பெரும் உலக அழிவினை காட்டினானே ஹிட்லர், அப்படி பெரும் அழிவினை அன்றி உங்கள் புலம்பல் ஒருவருக்கும் நல் வாழ்வினை கொடுக்கபோவதில்லை, பிரபாகரனும் ஹிட்லரும், வீரப்பனும் காட்டிய வழி அப்படி.


உண்மையில் தமிழகத்தின் முதல் வந்தேறி யார் தெரியுமா?


அந்நிய நாடான திபெத் பகுதியில் ஒரு குடும்ப சண்டையில், ஒரு பழத்திற்காக சண்டையிட்டு உடை கூட உடுத்தாமல் கோபித்து தமிழகம் வந்து தென்பகுதி பழநியில் கோமணத்தோடு நின்ற முப்பாட்டன் முருகன், அவன் தான் முதல் வந்தேறி. அந்த வந்தேறிக்கா ஊர்தோறும் ஆலயம அமைக்கபோகின்றீர்கள்? சீ சீ, இதுதான் மானமா?


பின் அதே இயமலையிலிருந்து தமிழகம் வந்து தமிழ்வளர்த்தானே அகத்தியன், அவன் இரண்டாம் வந்தேறி.


ஒரு வந்தேறியா தமிழ் வளர்த்தான்?, தமிழுக்கு இலக்கணம் எழுதினான்? நீங்கள் எல்லாம் அந்நிய பாஷயா பேசிகொண்டிருக்கின்றீர்கள்? அட சீ..என்ன மானங்கெட்ட இனம் இது?


இதனை நீங்கள் மறுக்க முடியுமா? ஏற்றுகொண்டு அகத்தியனின் தமிழை விரட்டுவீர்களா? அகத்தியனுக்கு முன்பிருந்த மொழியினை கொண்டு வருவீர்களா?


மானமுள்ளவர்கள் என்றால் அதனை செய்யுங்கள்


அதனை செய்துவிட்டு ரஜினி வரகூடாது என சொல்லுங்கள்.

No comments:

Post a Comment