Monday, May 29, 2017

ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது





சிரியாவினையும் ஈராக்கையும் அழிக்கும் ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது


பிலிப்பைன்ஸ் என்பது தீவுகள் நாடு, அப்படி ஒரு தீவு மவாரி, பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவர்கள் போல இஸ்லாமியரும் அதிகம், இத்தீவு இஸ்லாமிய மக்கள் பகுதி


புரூனே, இந்தோனேசியாவினை அண்டிய பகுதி என்பதால் அங்கும் இஸ்லாமியர் அதிகம்





அங்குதான் இந்த படுபாதகம் நடைபெற்றிருக்கின்றது, ஒரு மசூதியில் அந்த தீவிரவாதபடை ஐஎஸ் கொடியினை ஏற்றியிருக்கின்றது, அதனை தொடர்ந்து சண்டை மனித கேடயம் என பயங்கர அட்டகாசம்

இதுவரை 103 மக்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

புனிதமான ரமலான் மாதத்தில் அந்த இஸ்லாமிய மக்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லபட்டிருப்பது பெரும் ரணம், எல்லோர் மனதையும் பாதிக்கும் செய்தி

உலகெல்லாம் இஸ்லாமிய கொடி பறக்கவேண்டும் என்ற வெறியாட்டத்தில் இவர்கள் செய்யும் இந்த காட்டுமிராண்டிதனம் வரலாற்றில் பெரும் கருப்பு அடையாளம்

ஏற்கனவே அத்தீவுகளில் குழுமியிருந்த தீவிரவாதிகளை துடைத்தொழிக்கும் பணியில் ராணுவம் இறங்கியிருந்தது, ஆனால் அவர்கள் ஐ.எஸ் கொடி ஏற்றியிருப்பதுதான் அதிர்ச்சி

அவர்களை முறியடிக்கும் போராட்டம் தொடர்கின்றது,

ஆனாலும் ஒரு நெருடல்

ஈராக், சிரியா, ஈரான் என அமெரிக்க எதிரி நாடுகளையே குறி வைக்கின்றது ஐ.எஸ். இஸ்ரேலையோ அல்லது அதன் நட்பு நாடுகள் பக்கமே அது செல்வதில்லை

பிலிப்பன்ஸில் அமெரிக்க தளம் உண்டு, ஆனால் திடீரென‌ சீனாவுடன் பிலிப்பனிஸ் அரசு நெருக்கமானது, அமெரிக்காவினை விரட்டும் அளவு நிலமை சென்றது

இப்பொழுது பிலிப்பைன்ஸ்லிலும் நிலமை தலைகீழ், இனி அமெரிக்க தளம் இப்போதைக்கு வெளியேறாது, சந்தடி சாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பிலிப்பைன்சுக்கு உதவி என அமெரிக்க குதிக்கின்றது

கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்சம் அரசியல், மிகுந்த மதவெறியில் இத்துயரம் நிகழ்ந்திருக்கின்றது

மனதில் பெரும் துயரமும், ஆற்றாமையும், கண்ணீரும் குடிகொள்ளும் நேரமிது, கடந்து செல்ல முடியவில்லை

இவர்கள் எல்லாம் ஹிட்லர் பரவாயில்லை என்று வரலாற்றில் மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பது மட்டும் புரிகின்றது




 

 



 

No comments:

Post a Comment