Monday, May 22, 2017

ரஜினி உருவபொம்மையினை எரித்த தமிழ்படை வீரலட்சுமி கைது.

ரஜினிகாந்த்துக்கு எதிராக உருவபொம்மையினை எரித்த தமிழ்படை வீரலட்சுமி கைது.


ரஜினிக்கு ஏன் இந்த தமிழமைப்புகள் எல்லாம் இவ்வளவு எதிர்ப்பு?


எங்களுக்கு தமிழ் கவர்ணர்தான் வேண்டும், தமிழ் தலமை செயலாளர்தான் வேண்டும், தமிழ் கலெக்டர் மட்டும்தான் வேண்டும்




கல்பாக்க அணுவுலையில் தமிழ் விஞ்ஞானிகள் மட்டும்தான் வரவேண்டும் , சென்னையில் தமிழ் விமானம் மட்டும்தான் தரையிரங்க வேண்டும், சென்னையில் தமிழ் கார்கள் மட்டும்தான் ஓடவேண்டும், தமிழ் உணவுகள் விற்கும் ஹோட்டல் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஏன் கிளம்பவில்லை?


சீமான் கூட தமிழ் ஹீரோ, ஹீரோயின் வைத்துதான் படமெடுப்பேன் என சொன்னதுமில்லை, செய்ததுமில்லை ..


ஒருவேளை இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்து, ரஜினியினை சூடேற்றி அவரை அரசியலுக்கு இழுக்கும் திட்டமாக இருக்குமோ?


இப்படி பயமுறுத்தி தங்கள் கட்சியில் இணைக்கும் திட்டமாக இருக்குமோ?


ஆனல் இவர் ரஜினியினையே கொழுத்தினாலும் அவர் அரசியலுக்கு வரவா போகின்றார், இல்லை இந்த வீரலட்ச்சுமிக்குத்தான் 4 வோட்டு விழுமா?


போலிசாருக்கு இன்று கூடுதல் வேலை அவ்வளவுதான்


இந்த வீரலட்சுமிக்கு நம் ஆலோசனை எல்லாம், இவர் ஏன் டிரம்ப், புட்டீன், வடகொரிய அதிபர்களிடம் வம்பிழுக்க கூடாது??? ஒரே நாளில் உலகம் பூராவும் பிரபலமாகலாம்


இந்த கல்லுளி மங்கன் ரஜினிகாந்தினை சீண்டி என்னாக போகின்றது?



No comments:

Post a Comment