அந்த கலைஞரின் முழு கவிதை என்ன? என பலர் கேட்டார்கள், எங்கோ தேடியதில் சிக்கியது
கலைஞர் நெடுமாறனை குறித்து எழுதிய வரிகள் என இன்று சொல்லபடுவது இதுதான், கலைஞருக்கு எதிரிகள் அதிகம், அவர்கள் கல்லெறி எல்லை மீறும்பொழுதெல்லம் கலைஞரின் சொல்லெறி இப்படி நிறைய வரும்,
அப்படி நாம் வாசித்து மனதில் தங்கிய வரிகளைத்தான் முன்பு சொல்லியிருந்தோம், அது பழநெடுமாறனுக்கு மட்டுமல்ல பலருக்கு எழுதிய வரிகளின் கலவை, நினைவில் நின்ற வரிகளை கொஞ்சம் குழப்பிவிட்டேன், பொருத்தருள்வீர்
தசரதன் கதை சொன்ன நெடுமாறனுக்கு அன்று கலைஞர் ராமாயண பாத்திரங்களை வைத்தே பதிலளித்த முழு வரிகள் இவைகளே
"விடுதலைப் போர் நாயகராம் விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்
வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர் விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன்
என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும் முகஸ்துதி பல செய்து
மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க குறுக்குச் சுவர் கட்டி,
தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென தவிக்க விட்டு கடல் நடுவே அவரை; தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு விதையாக்கி
விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை
No comments:
Post a Comment