Friday, May 26, 2017

தாடி பாலாஜி நித்யா ஜோடி

இரு நாட்களாக ஒரு சங்கதி மீடியாவில் ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது உலக புரட்டிய புரட்சியாளரும் , புதிய இந்தியாவினை உருவாக்கி ஒளிகாட்டியவருமான ஒருவரின் செய்தி அது


அந்த மாபெரும் தலைவன் , அகில உலகத்தை ஆட்டிய இந்திய பெருமகன் தன் காதல் மனைவியினை நாட்டு நலனுக்காகவும், தான் கொண்ட கொள்கைக்காகவும் பிரிய போகின்றானாம்


அவனது உன்னத லட்சிய போராட்ட வாழ்வில், பல்லாயிரம் மக்களுக்கு அவன் வழிகாட்டும் மாபெரும் பணியில் அவன் இருக்க, அவனின் அருமை மனைவி அதாவது கார்ல்மார்க்ஸின் அறிவில் மயங்கி அவனுக்காய் வாழ்ந்த ஜென்னி போல இவன் மீது உயிரையே வைத்த அந்த மனைவி பிரிய போகின்றாளாம்.




அந்த ஜோடி யார் தெரியுமா?


தாடி பாலாஜி நித்யா ஜோடி


ஏதோ இந்தியாவிற்காக அணுகுண்டை சுமக்கும் விமானத்தின் விமானி விடைபெறுவது போலவும், புதிய நாட்டை கண்டுபிடிக்க கிளம்பும் கொலம்பஸ் தன் மனைவிக்கு கடைசிவிடை கொடுப்பது போலவும் அவர் பேசிகொண்டிருக்கின்றார்


விஞ்ஞானி எடிசன், ஐன்ஸ்டீன் போன்றோருடன் வாழமுடியாது என சென்ற, சிந்தனையாளன் சாக்ரடீசை கொட்டி தீர்த்த மனைவி போல அந்தம்மாவும் பேசிகொண்டிருக்கின்றது


தாடி பாலாஜி நித்யா ஜோடி பிரிகின்றதாம், ஒரே அழிச்சாட்டியம், பேச்சுவார்த்த நடத்தி சேர்த்து வைக்க ஐ.நா பொதுசெயலாளர் ஏன் வரவில்லை எனும் அளவிற்கு அலப்பறைகள்...


இந்த செய்தியினை 2 நாட்களாக தலைப்பு செய்தியாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள், இந்த தமிழக ஊடகத்தார்


குடிநீர் முதல் குழப்பமான பாடதிட்டம் வரை உள்ளூர் பிரச்சினை ஆயிரம், சிரியா முதல் அமெரிக்க கால் திரிகோணமலையில் படுவதுவரை வெளிநாட்டு சிக்கல் பல்லாயிரம்


ஆனால் இவர்கள் கவலை பாலாஜியின் தாடியினை சொறிவதில் இருக்கின்றது



No comments:

Post a Comment