கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம்
அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை"
கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார்
"குன்றனைய குமரி அனந்தன்
புகழ்மறைத்த துரோகி
வரிபுலிமேல் அமர்ந்தவாறு
உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி
.....
.....என நீண்டன வரிகள்,, இறுதியாக இப்படி முடித்தார்
"நாட்டோரம், ரோட்டோரம்
ஆயிரம் கதை இருக்க
காதோரம் நரைத்த மயிர்கதை
சொல்ல வந்தான் மயிராண்டி"
என முடித்திருந்தார், அதன் பின் கொஞ்சநாள் பழ.நெடுமாறன் சத்தமே இல்லை
இன்று கலைஞர் இல்லாத நிலையில் அன்னார் கலைக்க வந்துவிட்டாராம்,
முரசொலிக்காரர்கள் அந்த கவிதையினை தேடி எடுத்து மறுபிரசுரம் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம்
மறுபடி கொஞ்சநாளைக்கு பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?
No comments:
Post a Comment