Tuesday, May 30, 2017

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு, அப்படி மெரீனா சம்பவம் கூடுதலான ஒரு வழக்கு


பல வழக்குகள் பாயும் ஒருவன் குண்டர் சட்டத்தில் அடைபடுவது நடைமுறை, அதுதான் நடந்தது


இது தெரிந்தும் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் இந்த பிரிவினைவாதிகளை ஆதரிக்க தொடங்கியாயிற்று




இனி திமுக புலிகள் உறவு எந்த அளவு இருந்தது? எந்த எல்லை வரை இருந்தது? ஏன் திமுகவினை உணர்வாளர்கள் துரோகி என சொன்னார்கள்???


இப்படி பல விஷயங்கள் உண்டு, கலைஞரின் பெயர் அடிபடும் என்ற காரணத்திற்காக அவைகளை பட்டும் படாமலும் விமர்சித்ததுண்டு


ஸ்டாலின் இந்த அளவு சென்றுவிட்ட பின், இனி திமுக என்பது அந்த கும்பலில் முன்னாளைய ஒன்று என சொல்ல ஏகபட்ட விஷயங்கள் உண்டு


நாம் சொல்லாவிட்டாலும் இன்னொருவர் சொல்வர், அதனால் அவ்வப்போது எடுத்து விடலாம்.


கலைஞர் செய்ய யோசித்ததை எல்லாம் ஸ்டாலின் தயக்கமின்றி செய்ய தொடங்கிவிட்டார்..


ஆச்சரியமாக அதிமுக அரசு அதிரடி மூலம் தன் தேசபற்றை காட்டி, செய்ய வேண்டிய விஷயங்களை செய்கின்றது


அல்லது அவர்களை செய்ய வைத்து மத்திய அரசு விரிக்கும் வலையில் கொஞ்சமும் யோசனையின்றி சிக்கிவிட்டார் ஸ்டாலின்...


சீ..ச்சீ.. இவரெல்லாம் என சொல்ல தொடங்கிற்று தமிழகம்..


இன்றே இப்படி பல்டி அடிக்கும் நபர் , நாளை புலிகள் உத்தமர்கள் என கொடிபிடிக்க எவ்வளவு நேரமாகும்?


சீமானோடு கூட்டணி வைக்க எவ்வளவு நேரமாகும்???


அப்படியானால் நடிப்பின் மொத்த உருவமா இவர்கள்???


கேவலம் அரசியலுக்காக தேசவிரோத சக்திகளை ஆதரித்து திமுகவினை ஸ்டாலின் நாசமாக்கினார் என வரலாறு நாளை எழுதும்...


அது நடக்கத்தான் போகின்றது..



No comments:

Post a Comment